மூன்றாம் திருமணம் குறித்து வந்த செய்தி. ஒரே போடாய் போட்ட ரேஷ்மா.

0
11556
Reshma
- Advertisement -

“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சமீபத்தில் நடிகை ரேஷ்மா அவர்கள் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள புகைப் படத்தை பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இவரை தான் ரேஷ்மா அவர்கள் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என்றும், அதற்காக தான் அவருடைய புகைப் படத்தை போட்டு உள்ளார் என்றும் கூறி உள்ளார்கள். இது தொடர்பாக இணையங்களில் பல சர்ச்சைகள் எழுந்து உள்ளது. மேலும், இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து உள்ளார். இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தான் முதலில் அறிமுகமானர். அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B5YLoPMA2wk/

இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஆணா பெண்ணா பாருங்க ? வயச அப்புறம் கேட்டுக்கலாம். வைரமுத்து வீடியோவை வெளிட்ட சின்மயி.

- Advertisement -

மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் நியூட்ரலாக செயல்பட்டதால் என்னவோ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், நடிகை ரேஷ்மாவின் முதல் திருமணம் பெற்றோர்கள் பார்த்து அவர்கள் சம்மதத்துடன் நன்றாக கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ஆகும். ஆனால், சில வருடங்களிலேயே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின்னர் சில காலங்களில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்னர் இவர் தன் கணவருடன் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார். பின் இரண்டாவது திருமணத்திலும் இவருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

அதனால் அவருடனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சமீபத்தில் இவர் டைரக்டர் நிஷாந்த் ரவீந்திரன் உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் போட்டு இருந்தார். மேலும், அதில் “லைஃப் இஸ் டூ ஷார்ட்” என்று வாழ்க்கை பற்றி பல தத்துவங்களை பதிவிட்டும் இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் இவர் தான் இவருடைய காதலர் ஆக இருக்குமோ? அல்லது இவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளாரோ? என பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள் நெட்டிசன்கள். மேலும், இதை பார்த்த நடிகை ரேஷ்மா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, நீங்கள் என்னைப் பற்றியும் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கூறும் அனைத்தும் சரியானது இல்லை. மேலும், நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement