தர்ஷனுக்காக முகெனுக்கு வாக்களியுங்கள் .! வீட்டை விட்டு வெளிய வந்ததும் ட்வீட் செய்த போட்டியாளர்.!

0
3439
mugen
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றுடன் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

-விளம்பரம்-
mugen

இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் ரேஷ்மா கூட பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்தார்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அனைவருமே முகனை ஆகா ஓகோ என்று பாராட்டுங்கள் அதிலும் பாத்திமா பாபு மகனுக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசாக அளித்திருந்தார் இதில் இருந்தே எனக்கு சக போட்டியாளர்கள் மத்தியிலும் எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்தது இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த ரேஷ்மா வெளியில் வந்தவுடன் குறித்து பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் மேலும் என்னுடைய ஆதரவு மகனுக்குத்தான் என்றும் பதிவிட்டுள்ளார் எனவே எனக்கு நாட்கள் செல்ல செல்ல ஆதரவு கூடிக்கொண்டே வருகிறது

பிக் பாஸ் பட்டத்திற்கான வாக்குப்பதிவு தற்போது படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. மேலும், பல்வேறு இணையத்தளங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவில் கூட முகெனுக்கு தான் அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த சீசனின் முதல் மூன்று இடத்தை முகென் லாஸ்லியா, சாண்டி, ஆகியோர் பிடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. தற்போது சென்று கொண்டிருக்கும் ஓட்டிங் நிலவரப்படி முகெனுக்கு தான் அதிக வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து லாஸ்லியா இரண்டாவது இடத்திலும் சாண்டி மூன்றாவது இடத்திலும் கடைசி இடத்தில் சேரினும் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் ஐந்து நாட்களில் இந்த பிக் பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்ல போவது யார் என்பது நமக்கு தெரிந்துவிடும்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் யார் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விருமினால். அவர்களுக்கு நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement