இதனால் தான் என் மகளை பிக் பாஸுக்கு கூட்டிவரல – ரியோ மனைவி விளக்கம்.

0
1754
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த சில வாரங்களுக்கு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது . இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இஇருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் பல்வேறு வலைத்தளங்களில் நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் ஆஜீத்திற்கு குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் Freeze Task துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர். இதுவரை ஷிவானி, பாலாஜி, சோம், ரம்யா பாண்டியன் ஆகியோர்களின் குடும்பத்தினர் உள்ளே சென்று வந்துவிட்ட நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் ரியோ மனைவி ஸ்ருதி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், ரியோவின் மகளான ரித்தி வரவில்லை.

இது போட்டியாளர்களுக்கு ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இப்படி ஒரு நிலையில் தனது மகளை ஏன் அழைத்து வரவில்லை என்று ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். ரித்தியை ஏன் அழைத்து வரவில்லை என்று பலர் எனக்கு மெசேஜ் செய்து வருகிறீர்கள். அவள் 1 வயதுக்கு உட்பட்டவள் தான் என்பதாலும், கொரோனா கட்டுப்பாடுகளால் தான் அவளை அழைத்து செல்ல முடியவில்லை.

-விளம்பரம்-

Advertisement