‘நிம்மதியா வாழவிடுங்கடா’ – ராபர்டை சூசகமாக விமர்சித்த ரஷிதாவின் கணவர் போட்ட பதிவு.

0
413
rachitha
- Advertisement -

ராபர்ட் மாஸ்டர் செய்த செயலை குறித்து ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் சுசுகமாக போட்டு இருக்கும் இன்ஸ்டகிராம் பதிவு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கி ஒரு மாதத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான்.

-விளம்பரம்-

ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர்:

இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார். அதற்கு ரக்ஷிதா, நம்ம உள்ள வந்து சில நாட்கள் தானே ஆகிறது. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சூதனமாக தப்பித்து விட்டார். பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார். ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

ராபர்ட் மாஸ்டர்-ரக்ஷிதா சர்ச்சை:

அதிலும், ராபர்ட் மாஸ்டர் ஒவ்வொரு முறை வழியும் போது ரஷிதாவின் முகமே மாறிவிடுகிறது. மேலும், ராபர்ட் மாஸ்டர் எந்த நோக்கத்துடன் செய்கிறார் என்று புரிந்து கொண்டு ரக்ஷிதா விலக நினைக்கிறார். இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா கையை வலுக்கட்டாயமாக பிடித்திருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. ராபர்ட் மாஸ்டரை செயலை குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை போட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் முதன் முதலாக பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், ரக்ஷிதா நிகழ்ச்சியில் அழகாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டுக்குள்ளேயும், வெளியிலேயும் அவங்களை தொடர்பு படுத்தி பேசுகிற விஷயங்களை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு பையனும், பொண்ணும் சிரித்து பேசிக்கொண்டால் என்ன சொல்லுவாங்களோ அந்த மாதிரி தான் இருக்கிறது.

ராபர்ட் மாஸ்டர் குறித்து சொன்னது:

ஆனால், சில விஷயங்கள் தவிர்க்கலாம் என்பது போல தான் இருக்கிறது. மத்தபடி ரக்ஷிதா நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இவரை அடுத்து தினேஷின் நட்பு வட்டாரத்தில் ராபர்ட் மாஸ்டர் குறித்து விசாரித்த போது, ராபர்ட் மாஸ்டர் வலுக்கட்டாயமாக ரக்ஷிதா கையை இழுத்தது தினேஷின் மொத்த குடும்பத்தினர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியே சென்றால் ராபர்ட் மாஸ்டருக்கு கூடிய விரைவில் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டியதுதான் என்று கூறியிருக்கிறார்.

தினேஷ் போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் ரஷிதா கணவர் தினேஷ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஒரு பெண் சிரித்து பேசி எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்கிறார் என்றால், அவள் அனைத்திற்கும் ஆனவர் அல்ல, எல்லா மனிதர்களும் அமைதியான சுதந்திரத்துடன் வாழ்வதற்கு வசதியான சமூகத்தை உருவாக்க இது போன்ற முட்டாள்களைப் போன்ற ஆண்கள் வளர வேண்டும் என்று தினேஷ் பதிவு செய்துள்ளார். என்னதான் மனைவியை பிரிந்து இருந்தாலும் தினேஷ் போட்ட இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement