பிக்பாஸ் கவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திருச்சி கே கே நகர் ஐ சேர்ந்த கவினின் தாயாரான ராஜலட்சுமியும் மற்றும் அவரது மருமகள் ராணியும், அருணகிரி மற்றும் தர்மராஜ் ஆகியோருடன் இணைந்து சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் மொத்தத்தில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.
ஆனால் இந்த சீட்டு கம்பெனியில் பணத்தை கட்டி வந்த யாருக்கும் பணத்தை திருப்பித் தராததால் இந்த கம்பெனியை நடத்தி வந்த 4 நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் பாதிக்கப்பட்ட 34 நபர்களுக்கு 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை திருப்பித் தரவேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் தற்போது கவியின் தாயார் ராஜலட்சுமி அவரது மருமகள் ராணி ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இந்த நால்வருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என்று 29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் கவின் தாயார் கைது செய்தது குறித்து ட்வீட் செய்துள்ளார் சாக்க்ஷி, அதில் என்னுடைய ரசிகர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். கவின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத நிலையை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். எனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை இருக்கிறது.
ஆனால், அவர்கள் குடும்பத்தாருக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம். அவர் குடும்பத்திற்கு ஆதரவளியுங்கள் என்று கூறியுள்ளார். இதனைக்கண்ட சாக்ஷியின் ரசிகர்கள் நாங்கள் அவரை கிண்டல் செய்யமாட்டோம் என்று கூறினாலும், கவின் ஆர்மி சாக்க்ஷி விளம்பரத்திற்காக இப்படித்தான் செய்கிறார் என்று அவரைகுறை கூறி வருகின்றனர்.