“நயன்தாரா மாதிரி அது நடந்த அப்புறம் பண்ணலாம் – பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் பேட்டி.

0
420
sakshi
- Advertisement -

நயன்தாராவுடன் என்னை கம்பேர் பண்ணாதீங்க என்ற நடிகை சாக்ஷி அகர்வால் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் சாக்‌ஷி அகர்வால். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்து இருந்தார்.

-விளம்பரம்-
sakshi

பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கேணல் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது காலா படத்தின் மூலம் தான். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் மூலம் சாக்‌ஷி அகர்வால் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி:

இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த விஸ்வாசம் படத்தில் மருத்துவராக சாக்ஷி அகர்வால் நடித்து இருந்தார். அதற்க்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாக்ஷி போட்டியாளராக கலந்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்தார். ஆனால், இடையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. கவினை பற்றி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி பல சிக்கலில் சிக்கி இருந்தார் சாக்ஷி.

சாக்ஷி திரைப்பயணம்:

இதனாலே இவர் சீக்கிரம் வெளியேற்றப்பட்டார் என்று சொல்லலாம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து இருந்தார். கடைசியாக இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 3 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நான் கடவுள் இல்லை.

-விளம்பரம்-

நான் கடவுள் இல்லை படம்:

இந்த படத்தை நீண்ட காலங்களுக்கு பிறகு எஸ் எஸ் சி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரவணன், இனியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குழந்தைகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் சாக்ஷி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

நயன்தாரா குறித்து சாக்ஷி சொன்னது:

அதில் அவர், நான் கடவுள் இல்லை படம் குறித்து கூறிவிட்டு தற்போது எனக்கு கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னவுடனே பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் நயன்தாரா மாதிரி நடிக்க போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். உடனே சாக்ஷி, நயன்தாரா மிகப் பெரிய நடிகை, திறமையானவர், அவர் லேடி சூப்பர் ஸ்டார். நயன்தாரா கூட எல்லாம் என்னை கம்பேர் பண்ணாதீங்க. நான் இந்த மாதிரி கதை மட்டும் தான் நடிக்கப் போகிறேன் என்று இல்லை. எல்லா சோனரிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். அவர்களைப் போல் மேலே உயர்ந்த வந்ததற்கு பிறகு இப்படிப்பட்ட கதையில் தான் நடிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement