பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா விவாகரத்து வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் படிக்கும்போதே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவர் ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப்பின் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் இவர் காபி வித் காதல், வாரிசு, காரி, கொடுவா, மை டியர் பூதம், துக்ளக் தர்பார் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
சம்யுக்தா குறித்த தகவல்:
இதற்கிடையில் சம்யுக்தா தன்னுடைய பெற்றோர்கள் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு தொழில் அதிபர். இவர்களுக்கு ஒரு ராயன் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது தொடர்பாக அளித்த பேட்டியில் சம்யுக்தா, கொரோனா காலகட்டத்தில் என்னுடைய கணவர் துபாயில் வேறொரு பெண் உடன் 4 வருடம் தொடர்பில் இருந்தார் என்பது எனக்கு தெரிய வந்தது. இதைக் கேட்டவுடன் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது.

சம்யுக்தா கணவர்:
இந்த நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் இருந்தது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நான் அப்போது உடைந்து போய் இருந்தேன். இதை பற்றி அவரிடம் கேட்ட போது ரொம்ப டார்சல் செய்தார். அதன் பின் நான் இந்தியா வந்து விட்டேன். ஆனால், அந்த விஷயத்தில் நான் உடைந்து போய் இருந்தேன். அதன் பின் நான் நமக்கென்று ஒரு குழந்தை உள்ள இருந்தது. அந்த குழந்தைக்கு நாம் தான் பொறுப்பு என்று எனக்கு தைரியம் சொல்லி கொண்டேன்.

விவாகரத்துக்கு காரணம்:
என்னுடைய மகன், அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்கும் போதெல்லாம் வேலையில் இருக்கிறார். அவரால் தற்போது இங்கு வர முடியாது என்று அவனிடம் பொய் சொல்லி இருந்தேன். அதன் பின் தான் நான் பாவனாவை சந்தித்தேன். அவர் என்னுடைய பள்ளியில் சீனியர் என்பதால் இருவரும் நன்றாக பேச ஆரம்பித்தோம். நான் என் வாழ்க்கையில் நடந்த கொடுமையான விஷயத்தை பற்றி அவரிடம் கொட்டி தீர்த்து விட்டேன். அதனைக் கேட்ட பிறகு அவர் எனக்கு ஆறுதல் அளித்தது மட்டுமல்லாமல் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிந்துரையும் செய்தார்.
சம்யுக்தா விவாகரத்து:
பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என் வாழ்க்கையில் மிக முக்கிய புள்ளியாக மாறியது. பின் விவாகரத்து கொடுத்தேன். ஆனால், அவர் இங்கு வர மறுக்கிறார். அதனால் நான் சிக்கிக் கொண்டு இருக்கிறேன் என்று சம்யுக்தா பேசி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சம்யுக்தா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். இது தொடர்பாக சம்யுக்தா, நான் என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்து முன்னேறி வருகிறேன். 2025-ல் இறுதியாக என்னுடைய பேப்பர் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது நான் வலிமையானவளாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார்.