மக்களுக்கு நீங்க என் விலகுறீங்க-னு தெரியணும் . அது என்ன “பர்சனல் ரீசன்” – சனம் கேள்விக்கு முன்னாள் MNM பொது செயலாளர் பதிலடி.

0
933
sanam
- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விள்குவதாக அறிவித்து இருந்தார். அதே போல மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த சந்தோஷ் பாபுவும் விலகுவதாக அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகைவர்கள் குறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். எங்கே போனது உங்கள் நேர்மை ? உங்கள் அனைவருக்கும் என்னுடைய கேள்வி, நீங்கள் ஜெயிச்சு இருந்தாலும் கட்சியிலிருந்து விலகி இருப்பீர்களா ? அனைவருமே கமலஹாசனுக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் நீங்கள் துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று சாடி இருக்கிறார் சனம் ஷெட்டி.

- Advertisement -

இதற்கு ரசிகர் ஒருவர்,நீங்கள் மிகவும் வலிமையான பெண். இந்த கடினமான நேரத்தில் நீங்கள் ஏன் கமல் கட்சியில் சேரக்கூடாது என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, உங்கள் யோசனைக்கு நன்றி, எந்த கட்சியில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. அரசியலில் இல்லாமலும் மக்களுக்கு பல சேவைகளை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டியின் இந்த ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ள சந்தோஷ் பாபு, தனிப்பட்ட காரணம், தனிப்பட்ட காரணமாகவே இருக்கட்டும். இதற்கு தனியாக ஒரு பெட்டியை உருவாக்குவோம். ஒருவேளை நான் உங்கள் கேள்விக்கு பதில் சொன்னால், கண்டிப்பாக நீங்கள் கேட்ட கேள்விக்கு முதலில் வருத்தம் தெரிவிப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement