ஐயனார் பக்கத்தில் போலீஸ் தோற்றத்தில் தந்தை சிலை.! சரவணன் கட்டிய கோவிலை பாருங்க.!

0
9332
saravanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்து சர்ச்சையான விஷங்களை பேசியதால் சரவணன் மீது சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணன் எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை. இருப்பினும் சமீபத்தில் சரவணனுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அப்போது எடுத்துக்கொண்ட சரவணனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : இதுவரை எனக்கு யாரும் அப்படி செய்ததே இல்லைனு கவினிடம் சொன்னாயே.! அப்போ இது என்ன லாஸ்லியா.! 

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக சரவணன் பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது பெற்றோர்கள் குறித்து பேசிய சரவணன், என்னுடைய அப்பா அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை.

அவர்கள் மறைந்த பின்னர் அவர்கள் வாழ்ந்த வீட்டில் அவர்கள் நினைவு எனக்கு உறுதிகொண்டே இருந்தது. அதனால் அந்த வீட்டை நான் விற்றுவிட்டேன். அந்த பணத்தில் தற்போது ஒரு கோவில் ஒன்றை கட்டியுள்ளேன்.மேலும், என்னுடைய அப்பா ஒரு போலீஸ் அதிகாரி அதனால் அவரை போல ஒரு ஐயனார் சிலையை செய்துளேன். இன்னும் சிறிது நாளில் அந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற நடைபெற இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தான் கட்டிய ஐயனார் கோவில் ஒன்றை காண்பித்துள்ளார் சரவணன். அதில் ஐயனாரின் பக்கத்தில் காவலர் சிலையாக தனது அப்பாவின் உருவத்தை சிலையாக வடிவமைத்து வைத்துள்ளார் சரவணன். இதோ அதில் ஒரு சில புகைப்படங்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement