என் உயிர் போனால் அவர் தான் காரணம் – முதலமைச்சர் தனி பிரிவில் சரவணன் மனைவி பரபரப்பு புகார்.

0
2150
- Advertisement -

பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தவருக்கு சோறு போட்டவள் நான்தான் என்று நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சரவணன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த பருத்தி வீரன் என்ற படத்தில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் தனெக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

-விளம்பரம்-

தற்போது இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அமைச்சர்கள் கலந்துரையாடும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரிடம் பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கோரிக்கை மனுக்களை வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பருத்திவீரன் நடிகர் சரவணனனும் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியது, நான் கடந்த 2014 ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடமிருந்து லேக் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கி இருந்தேன்.

- Advertisement -

நடிகர் சரவணன் அளித்த மனு:

அதில் எனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் 700 முதல் 800 சதுர அடி வரை இருக்கு. இந்த கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை ராமமூர்த்தி என்பவர் வாங்கிக் கொடுத்தார். அதற்கு பின் நான் கொரோனாவிற்காக ஊருக்கு போவதும், வருவதுமாக இருந்தேன். அதோடு என்னுடைய முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் நான் 2015 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். இரண்டாவது திருமணம் செய்த பிறகு முதல் மனைவியுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டு அவரை விட்டு நான் வந்து விட்டேன். இதன் காரணமாக நான் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு செல்லாமல் இருந்தேன்.

சரவணனின் இடம் தகராறு:

இதை பயன்படுத்தி கொண்டு ராமமூர்த்தி கார் பார்க்கிங் இடத்தில் கடையை கட்டிக்கொண்டு மின் இணைப்பையும் வாங்கி வரி கட்டி விட்டதாக சொல்கிறார். என்னுடைய கார் பார்க்கிங், யூ டி எஸ் இடத்தை அவருடையதாக கூறி ஏமாற்றுகிறார். அதோடு ராமமூர்த்தியின் மனைவி என்னை வெட்டுவதாகும் குத்துவதாகும் மிரட்டுகிறார். ராமமூர்த்தி மனைவி பெயர் ஜெயமணி . இதனால் நான் அவர்கள் மீது புகார் அளித்து இருக்கிறேன். அந்த இடத்தை மீட்டு வாங்கித் தருமாறு நான் அமைச்சர் தாமோ. அன்பரசனிடம் முறையிட்டு மனு கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சரவணன் மனைவி அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து நடிகர் சரவணன் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ பேட்டி ஒன்று எழுதி இருக்கிறார். அதில் அவர், நான் சரவணன் மனைவி சூர்யா ஸ்ரீ. அவர் சொல்வதெல்லாம் பொய். அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை. என்னையும் ஏமாற்றி நிறைய பிரச்சனைகளை அவர் செய்திருக்கிறார். ஒரு பெண்ணை வீட்டோட வைத்துக் கொண்டு எனக்கு பிரச்சனை கொடுக்கிறார். எனக்கு இன்னும் அவர் விவாகரத்தை கொடுக்கவில்லை. இப்படி இருக்கும் போது அவர் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்? இரண்டாவது மனைவி எப்படி வருவார்கள்? அவர் அந்த பெண்ணை வைத்துக் கொண்டிருக்கிறார்.

சரவணன் குறித்து சொன்னது:

அவர் சொன்ன முகலிவாக்கம் இடத்தில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. அவர் ரவுடிசம் செய்கிறார். அந்த வீட்டை நான் காசு கொடுத்து வாங்கினேன். நான் சம்பாதித்த காசில் அவர் பெயரில் நான் வாங்கினேன். அதுதான் நான் செய்த தவறு. 12 லட்சம் ரூபாய் நான் கட்டினேன். மீதி 36 லட்சத்திற்கு லோன் போட்டு இருக்கிறேன். அதற்கு இஎம்ஐ நான் கட்டி வருகிறேன். என்னை காதலித்து கல்யாணம் செய்து ஏமாற்றி விட்டார். தற்போது நான் சொந்த காசில் கட்டிய வீட்டில் இருந்து வெளியேறும் படி மிரட்டுகிறார்.மேலும் கொலை மிரட்டல் அதிகமாக வருகிறது. என் உயிருக்கு அவர் தான் காரணம் பருத்திவீரன் படத்திற்கு பின் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தார். அவருக்கு நான்தான் சோறு போட்டேன். இதை அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார் என்று சரவணன் முதல் மனைவி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement