‘பெருசா பேசவந்துட்ட, போய் உட்காரு’ மேடையிலேயே சராமாரியாக சண்டை போட்ட சென்ட்ராயன் -கே.ராஜன்.(பின்னணி இது தான்)

0
383
- Advertisement -

மேடையிலேயே சென்ராயன் மற்றும் தயாரிப்பாளர் கே ராஜன் சண்டை போட்டு இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் தான் லோக்கல் சரக்கு. இவர் இதற்கு முன்பே சுறா, அழகை மலை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்து இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படம் என்று கூறப்படுகிறது. டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை சுவாமிநாதன் ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் சுவாமிநாதன் ராஜேஷே இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் உபாசனா, இமான் அண்ணாச்சி, சென்றாயன், வையாபுரி, ரெமோ சிவா, வினோதினி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். ஒரு சாதாரண மனிதன் குடிப்பதற்காக தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்கிறான். இதுதான் படத்தின் ஒருவரி. இதை சுற்றி நடப்பது தான் கதைக்களம். மேலும், இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா :

இந்த நிலையில் லோக்கல் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று இருந்தது. இந்த விழாவில் இசையமைப்பாளர் தீனா, இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன், சங்கர் கணேஷ், ராதாரவி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். அப்போது மேடையில் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறியது, ராஜேஷ் ஒரு சிறந்த இசையமைப்பாளர். இப்படத்தின் பாடல்களை நான் கேட்டேன். அனைத்தும் நன்றாக இருந்தது. ஒரு தயாரிப்பாளர் பல லட்சங்கள் செலவு செய்து ஒரு படம் எடுக்கிறார். இதனால் நடிகர்கள் அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

விழாவில் கே.ராஜன் சொன்னது:

ஒரு படத்திற்கு இசையமைக்க மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு வசூலிக்கிறார்கள் தெரியுமா? பல கோடி ரூபாய் செலவு செய்து தயாரிப்பாளர்கள் ஒரு படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்தவர்கள் கூட இருக்கிறார்கள். ஆகையால், எல்லோருமே தங்களின் வளர்ச்சிக்கு காரணமான இருந்தவர்களை நினைத்துப் பாருங்கள். அதுதான் நன்றி கடன். ஆனால், யாரும் இப்போது அதை செய்வதில்லை. தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ராஜேஷத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் இன்று தயாரிப்பாளர் ஆகிவிட்டீர். ஆனால், இனி நீங்கள் படம் தயாரிக்க கூடாது. 100க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்த ஆர் பி சௌத்ரி, பாவம் பண்ணவந்தான் படம் தயாரிப்பாளராக வருவான் என்று சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

சென்ட்ராயன்-ராஜன் சண்டை:

ஆகையால், நீங்கள் பாவம் பண்ணியவன் தான். உங்களின் தாய் தெய்வமாய் இருந்து உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் இப்போது படம் எடுக்க வேண்டாம். ஒரு ஐந்து, பத்து படங்களுக்கு இசையமைத்து அதன் மூலம் நன்றாக சம்பாதித்து அதற்கு பிறகு படம் எடுக்க வாருங்கள். படம் கேட்பதெல்லாம் ஒரு டார்ச்சர் என்று கே ராஜன் பேசியிருந்தார். இப்படி கே ராஜன் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் குறுக்கிட்டு நடிகர் சென்ராயன், எங்கள் தயாரிப்பாளர், எங்களின் முதலாளி அவர் படம் எடுத்தால் தான் எங்களுக்கு வேலை என்று கூறினார். உடனே கோபம் கொண்ட கே ராஜன் மேடையில் அவரை தள்ளிவிட்டு, போய் உட்காரு. நாங்கள் வேற வேலை வாங்கித் தரும். அவங்களுக்கு வேலை இல்லாமல் ஆகிட கூடாது.

கடுமையாக திட்டிய கே.ராஜன்:

பெருசா பேச வந்துட்டியா. 10 வருஷமாக படம் எடுத்தவங்க எங்க? உங்களுக்கு வேலை தருவதற்காக நாங்கள் வெளியே போகணுமா? நாங்க வாழ்க்கையை இழக்கணுமா? தயாரிப்பாளராக இருப்பது எவ்வளவு டார்ச்சர் என்பது எங்களுக்கு தெரியும். நடிகனுக்கு தெரியாது. நடிகர்கள் எல்லாம் சுகமாக இருப்பவர்கள். நீங்கள் நன்றியோடு இருக்கீங்களா? உங்களுடைய வாய்ப்பு வரும்போது பேசுங்க. நான் பேசும் போது குறுக்கே வராதீங்க என்று கடுமையாக பேசியிருந்தார். இப்படி மேடையிலேயே சென்ராயன்- கே ராஜன் சண்டை போட்டு இருக்கும் சம்பவம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement