சாதாரண முடிவுகளுக்கு கூட மகள்களை விலைமாது என்று அழைக்கும் நோய் – அகிலாவின் பேச்சால் கடுப்பான சின்மயி

0
7950
chinmayi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் Freeze Task துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.இது நாள் வரை சண்டை சச்சரவு என்று போய்க்கொண்டு இருந்த பிக் பாஸ் வீட்டில் இந்த டாஸ்க்கிற்கு பின்னர் தான் கொஞ்சம் ஜாலியாகவும், எமோஷனலாகவும் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை ஷிவானி, பாலாஜி, சோம், ரம்யா பாண்டியன் ஆகியோர்களின் குடும்பத்தினர் உள்ளே சென்று வந்துவிட்டனர்.

- Advertisement -

இந்த டாஸ்கில் முதல் ஆளாக இதில் உள்ளே வந்த ஷிவானியின் அம்மா சிவானி கண்டமேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார்.உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா? ஏன் டி எப்ப பாத்தாலும் அவன் பின்னாடியே சுத்தர, உனக்குன்னு ஒரு தனித்தன்மை கிடையாதா. எப்ப பாத்தாலும் அவன் என்ன சொல்றானோ அத தான் செய்வியா?இதுக்கு தான் உள்ள வந்திய ? இந்த 85 நாள்ல நீ என்ன பண்ணணுன்னு சொல்லு. இது பிக் பாஸ் நிகழ்ச்சி ஜோடியா ஆட இது ஒன்னும் ஜோடி நிகழ்ச்சி கிடையாது. உன்னால ஊர்ல சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் அசிங்கப்படுறோம் என்று கண்ட மேனிக்கு திட்டித்தீர்த்தார்.

ஷிவானியின் அம்மாவின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் பேசும்பொருளானது. ஷிவானியின் அம்மாவிற்கு ஆதரவாக இருந்தாலும் ஒரு சிலர் ஷிவானியின் அம்மா செய்தது தவறு என்று கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஷிவானி அம்மாவின் பேச்சை கண்டித்து பாடகி சின்மயி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், இந்த போஸ்ட் எனக்கு பிடித்திருக்கிறது. நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை. ஆனால் இந்த தாய் தன் மகளையே அசிங்கப்படுத்தியது எனக்கு தவறாகத் தெரிகிறது. உங்கள் கேரக்டரை அசிங்கப்படுத்தும் தாய் உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் லக்கி என்று உணருங்கள்.

-விளம்பரம்-

ஹேர் ஸ்டைல், காஜல் அல்லது லிப்ஸ்டிக் போன்ற சாதாரண முடிவுகளுக்கு கூட மகள்களை விலைமாது என்று அழைக்கும் நோய் இந்திய பெற்றோருக்கு உள்ளது.யாரை மயக்க பாக்குற, எவன் பின்னாடி சுத்துற என்று அம்மாக்கள் கேட்கிறார்கள். ஊர்ல 4 (உதவாக்கரை) பேர் என்ன சொல்வாங்க என்பதுதான் பெற்றோர் தங்கள் மகள்களையே அசிங்கப்படுத்த முக்கிய காரணம். நீங்கள் ஒரு பெற்றோர் எனில் தயவு செய்து உங்கள் மகள்களின் கேரக்டரை அசிங்கப்படுத்துவதை நிறுத்தவும். ஒரு அடல்ட் போன்று பொறுப்பாக பேசுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement