பிக் பாஸுக்கு பின் ஷிவானி எடுத்த அதிரடி முடிவு – ஆரி தான் காரணமா ? ஏமாற்றத்தில் 4 மணி ரசிகர்கள்.

0
79221
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-42.jpg

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது.

- Advertisement -

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஷிவானி. பிக் பாஸ் வீட்டில் ஷிவானி இருந்த முதல் வாரத்தின் போது ஆரி, ஷிவானி யிடம் நீங்கள் தினமும் நான்கு மணிக்கு ஒரு போஸ்ட் போடுறீங்களே. அதை பார்க்க ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். மேலும், என்ன ஆகவேண்டும் என்பதற்காக அதை எல்லாம் பதிவிடுகிறார்கள் என்று கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதிலளித்த சிவானி, நிறைய பேர் இங்கே நான் பண்ணுவது கேம் பிளான் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் அப்படி சொல்லும் போது அவர்களுக்கு தான் அந்த கேம் பிளான் இருக்கிறது என்பது போல தான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் எந்த கேம் பிளானுடன் நான் வரவில்லை எனக்கு தோன்றுவதை தான் இங்கே நான் செய்துகொண்டிருக்கிறேன். அனைவருமே பாராட்டுக்காக தான் வேலை செய்துகொண்டிருக்கிறோம் என்று கூறி இருந்தார். நீங்க கேட்ட கேள்விக்கு அதன் பதில் என்று ஷிவானி சொல்வதற்குள் ஆரி குறுக்கிட்டு ஷிவானிக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement