அப்படி சொன்னாலே அது தனுஷ் கேங் தான் – விஷ்ணு,தினேஷ் சண்டையில் தனுஷை வம்பிழுத்த சுசித்ரா.

0
447
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்தார். அப்போது அவர் ஹலோ சென்னை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதற்குப் பிறகு இவர் பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் ஸ்ரேயா சரண், தமன்னா, மாளவிகா போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்து இருக்கிறார். அதற்கு பின்பு இவர் சினிமாவில் பாடவும் ஆரம்பித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் பாடி இருக்கிறார். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார்.

- Advertisement -

சுசித்ரா குறித்த தகவல்:

இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி:

இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார். அதற்கு பிறகு இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆனால், இவரால் நீடித்து இருக்க முடியவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சில ஆண்டுகள் என்ன செய்தார்? எங்கிருந்தார்? என்று கூட தெரியவில்லை. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து கமென்ட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பாக பேசப்பட்டது.

-விளம்பரம்-

விஷ்ணு- தினேஷ் சண்டை:

இதற்கு முழுக்க முழுக்க காரணம் மாயாவும் அவருடைய கேங்கும் தான் என்று கூறப்பட்டது. இது குறித்து சுசித்ரா, மாயா தான் பிரதீப் வெளியேறியதற்கு காரணம். மாயாவை பற்றி நன்றாகவே தெரியும். அவர் ஒரு லெஸ்பியன் என்று எல்லாம் பேசி இருந்தார். இதை அடுத்து மாயக் குடும்பத்தினர் போலீசில் சுசித்ரா மீது புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு- தினேஷ் இடையே நடந்திருக்கும் கடுமையான மோதல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக் சென்று கொண்டிருக்கிறது. தினேஷை நரி என்று விஷ்ணு சொல்ல, விஷ்ணுவை தினேஷ் அமுல் பேபி என்று சொல்லி இருக்கிறார்.

Vishnu

சுசித்ரா விளக்கம்:

இதனால் விஷ்ணுவுக்கு பயங்கரமான கோபம் வந்து சேரை எட்டி உதைத்து இந்த மிதி உனக்கு தான் என்று கூறியிருக்கிறார். இப்படி அமுல் பேபி என்று தினேஷ் அழைத்ததற்கு ஏன் விஷ்ணு கோபப்படனும். இது ஒன்னும் பெரிய கெட்ட வார்த்தை இல்லையே என்று ரசிகர்கள் எல்லாம் கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து சுசித்ரா, தனுஷ் மற்றும் அவர்களுடைய கேங்க் தான் அமுல் பேபி என்ற வார்த்தைக்கு தனி அர்த்தம் ஒன்றை வைத்து இருக்கிறார்கள். வெள்ளை நிற பம் இருப்பவர்களை தான் அமுல் பேபி என்று தனுஷ் கேங்க் அழைக்கும். இது விஷ்ணுவுக்கும் தெரியும். அதனால்தான் விஷ்ணு அப்படி அழைத்தவுடன் கோவப்பட்டார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement