சுசித்ரானா என்னனு தெரியுமா ? வெளியில் வந்ததும் சுச்சி போட்ட பதிவு.

0
1106
suchi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50வது நாளான நேற்று (நவம்பர் 22) சுசித்ரா வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த கையோடு அவர் பாலா மற்றும் ஷிவானி பற்றி ஒரு கிண்டலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

-விளம்பரம்-
suchi

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கையோடு இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுகொண்டிருக்கிறார்.

அதில் முதலில் பாலாஜி மற்றும் ஷிவானியை பற்றி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சுசித்ரா. இந்த புகைப்படத்தில் சுசித்ரா என்ற பெயருக்கு விளக்கத்தை பதிவிட்டுள்ளார். இதில் சுசித்ரா என்றல் அழகான, புகழ்பெற்ற அல்லது அழகான புகைப்படம் என்பது பொருள் என்ற புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement