பார்க்கப்படாத உண்மை – வெளியில் வந்த பின்னர் பாலாஜி குறித்து சுச்சி போட்ட பதிவு.

0
2665
suchi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50வது நாளான கடந்த ஞாயிற்று கிழமைக் சுசித்ரா வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.

- Advertisement -

எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது கொஞ்சம் நாளைக்கு சமூக வலைதளத்தில் வர மாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், வெளியில் வந்த முதல் நாளே தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை போடத்துவங்கிவிட்டார். அதிலும் இவர் பெரும்பாலும் பாலாஜி பற்றி தான் பதிவுகளை போட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலாஜி பிக் பாஸ் வீட்டில் அழுத போது எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்த முகம் எதையும் போலியாக காட்டாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், #Balajiarmy #BiggBossTamil4 #thesadtruth #theunseentruth போன்ற ஹேஷ் டேக்குகளை எல்லாம் போட்டுள்ளார் சுச்சித்ரா.

-விளம்பரம்-
Advertisement