தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய "சிங்கக்குட்டி" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் "புதுமுகங்கள் தேவை", "இதுவும் கடந்து போகும்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை காதலித்து வருகிறார் என்று சில தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
நடிகை சுஜா வருணிக்கும், சிவகுமாருக்கும் ஏற்கன்வே நிட்சயதார்த்தாம் நடைபெற்றதாகவும் தகவல்கல் வெளியான நிலையில் தனது காதல் கதை குறித்தும், தனது திருமணம் குறித்த தக்வல் குறித்தும் முதல் முறையாக அறிவித்துள்ளார் சுஜா. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள சுஜா ஆகஸ்ட் 3 ஆம் தேதி 2017 ல் கும்பகோன்த்தில் உள்ள கோவில் வாசலில் தான் முதன் முதலில் அவரை பார்த்தேன். இப்போ 2018 ஆகிறது இத்தனை ஆண்டுகளில் நிறைய ஏற்ற தாழ்வுகளை நாங்கள் சந்தித்துள்ளோம். இத்தனை வருடங்களில் சந்தோசமாக இருப்பதை தாண்டி நிறைய கஷ்டங்களை நாங்கள் எதிர்கொண்டு வந்துள்ளோம் ஆனால், இப்போது ஓரு சுமுகமான நிறைவை எட்டியுள்ளோம். எங்களை நினைத்து நாங்கள் இருவருமே பெருமைபட வேண்டும். அடுத்த மாதம் நவம்பர் 19 தான் மிகப்பெரிய நாள். உண்மையில் நான் எங்களுடைய திருமணதின் தேதியை இப்போது தான் வெளியிடுகிறேன்.
எங்களுடைய உறவு இத்தனை தூரம் வருமா என்று நான் கொஞ்சம் கூட நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள போகும் நபரின் பெயர் சிவகுமார்(சிவாஜி தேவ் என்பது செல்ல பெயர் ), திருமணத்திற்கு பின்னரும் அவருடன் எனது வாழ்வு இனிமையாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை இந்த அளவிற்கு புரிந்து கொண்ட ஒரு கணவர் எனக்கு கிடைக்கபோகிறார் என்பது நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் போல உணர்கிறேன். அதே போல இந்த மனுஷன தவிர வேற யாராலும் என்னுடன் வாழவே முடியாது. அவரை என்னுடைய கணவர் என்று சொல்வதை விட என்னுடைய குரு என்று தான் சொல்லவேன் என்று கூறியுள்ளார் சுஜா.




