குறைந்து வரும் சுவாரசியம் – வனிதாவை போல வெளியேறிய போட்டியாளரை வைல்டு கார்டாக கொண்டு வருப்போகும் பிக் பாஸ்

0
5598
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு செய்து தற்போது 50வது எபிசோடை நெருங்கியுள்ளது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது.

-விளம்பரம்-
suresh

ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் போட்டியாளராக வந்த சுசித்ரா, பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

- Advertisement -

இதனிடைய மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்த அஸீம் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் மூன்றாவது போட்டியாளராக வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக கொண்டு வர பேச்சு வார்த்தை சென்று கொண்டு இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளே இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது.

ஆனால், அர்ச்சனா என்ட்ரிக்கு பின்னர் சுரேஷ் சக்கரவர்த்தியின் குரல் பிக் பாஸ் வீட்டில் கேட்கவில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துவிட்டது, இருப்பினும் நிகழ்ச்சியில் ஒரு சுவாரசியம் இல்லை. இதனால் சுரேஷ் சக்கரவர்த்தியை பட்டை தீட்டி மீண்டும் கொண்டு வர திட்டமிடபட்டுள்ளதாம். கடந்த சீசனில் வனிதா வெளியேறிய பின்னர் நிகழ்ச்சி கொஞ்சம் தலை தொங்கியது. பின்னர் அவர் வைல்டு கார்டு என்ற பெயரில் உள்ளே வந்த பின்னர் நிகழ்ச்சி பட்டையை கிளப்பியது. எனவே, அதே வித்தை சுரேஷ் சக்ரவர்த்திக்கும் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-
Advertisement