பிக் பாஸில் இருந்து வெளியே வந்த கையோடு விவாகரத்தை உறுதி செய்த சமுத்திரம் பட நடிகையின் கணவர்.

0
77540
suryakiran
- Advertisement -

இந்திய சினிமாவில் அதிக அளவில் கதாநாயகர்களில் குழந்தைக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் என்றால் அது ‘மாஸ்டர் சுரேஷ்’ தான்.ஆம், அந்த காலத்தில் ரஜினி,கமல்,விஜயகாந்த்,அமிதாப் பச்சன் என கிட்டத்தட்ட 200+ படங்களுக்கு மேல் சிறு வயதிலேயே நடித்தவர் சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் சிறு வயது ரஜினி தன்னுடைய தம்பியை வளர்க்கும் அந்த சிறு வயது ரஜினி கேரக்டரில் நடித்தவரும் சுரேஷ் தான்.

-விளம்பரம்-

இவருடைய உண்மையான பெயர் சூரிய கிரன்.சிறு வயதிலேயே நடிப்பில் ஊரிப்போன இவர், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் ரவி தேஜாவிடம் ஸ்க்ரிப்ட் ரைட்டிங் கற்றுக் கொண்டுள்ளார். கவிதா முதல் கல்பனா வரை என்ற படத்தை இயக்கியுள்ளார்.மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர் என்பது பலரும் அறியாத ஒன்று.

- Advertisement -

இவர் இயக்கிய இந்த படத்தில் மொத்தம் 18 ஹூரோயின்கள். மேலும், தெலுங்கு திரையுளகிலும் 5 படங்களை இயக்கியுள்ளார் சூரியகிரண். சமுத்திரம் படத்தில் சரத் குமாருக்கு தங்கசியாக நடித்த காவேரிக்கும் சூரிய கிரணுக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா கிரண் தெலுங்கு பிக் பாஸின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆனால், முதல் வாரத்திலேயே இவர் வெளியேறிவிட்டார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சூர்யா கிரண், நாங்கள் பிரிந்தது உண்மை தான். ஆனால், இப்போதும் அவள் என்னிடம் திரும்பி வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அவள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இன்றும் என்னுடைய போன், ஐபாடில் கூட அவளுடைய புகைப்படத்தை தான் வைத்துளேன்.

-விளம்பரம்-

என் அம்மா கூட சொன்னார்கள், இன்னும் அவள் போட்டோவை வச்சிருக்க உனக்கு வெக்கமா இல்லையா என்று கேட்டார். ஆனால், என்னை பொறுத்த வரை இந்த ஜென்மத்திற்கும் அவள் ஒருத்தி தான் எனக்கு என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையில் வெற்றியை பார்த்த பிறகு தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள சூர்யா கிரண், தனது வீட்டை ஜப்தி செய்தார்கள், காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், விபத்து கூட ஏற்பட்டது. இப்படி அனைத்து கெட்ட நேரங்களும் ஒரே சமயத்தில் தன்னை ஆட்டி படைத்ததாக கூறியுள்ளார்.

Advertisement