தமிழில் பேராதரவைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 23 ) துவங்கியது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயம் இல்லாத சில போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தாலும், ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் தான், அந்த வகையில் நடன இயக்குனரான சாண்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். எப்போதும் குறும்புத்தனமாக இருக்கும் தாண்டி முதல் நாளே தனது முகத்தில் தையல் போடும் அளவிற்கு ஒரு பரிதாபமான நிலையை சந்தித்து விட்டார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பரிட்சியம் அடைந்தார். சென்று அதன் பின்னர் இவர் ஜோடி சீசனிலும் நடன இயக்குனராக இருந்து வந்தார் மேலும் தற்போது திரைப்படங்களிலும் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் சாண்டி. இவரது சிறப்பான அம்சமே மற்றவர்களை கலாய்ப்பதும் கலகலப்பான குணமும் தான்.
இதையும் பாருங்க : முதல் நாளே மலர்ந்த காதல்.! கவின் மீது காதலில் விழுந்தார் அபிராமி.!
கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் ஏன் தாண்டி ஸ்கூல் பாடல் மூலம் பங்கமாக கலாய்த்துள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளான நேற்று(ஜூன் 24) வழக்கம் போல காலை எழுந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அதிலும் நடன இயக்குனரான சாண்டியை சொல்லவா வேண்டும்.
நேற்று காலை எழுந்தவுடன் சாண்டி சக போட்டியாளர்களிடம் மிகவும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரே இல்லாத நீச்சல் குளத்தில் இறங்கி ஆட்டம் போட்டார் சாண்டி. அப்போது எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தின் உள்ளே வழுக்கி விழுந்த தாண்டி, தனது முகத்தில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், அப்போது அதை யாரும் கவனிக்கவில்லை. அதன் பின்னர் தனது முகத்தில் அடிபட்டு உள்ளதாகவும் உடனடியாக தனக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார் சாண்டி.
அதன் பின்னர் பிக்பாஸ் மருத்துவ குழு சாண்டிக்கு காயத்திற்கான சிகிச்சை அளித்தனர். வழுக்கி விழுந்ததில் அவரது வாய்ப் பகுதிக்கு கீழ் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நான்கு தையல்களும் போடப்பட்டுள்ளது. முகத்தில் காயம் அடைந்த போதும் அதனை பொருட்படுத்தாத சாண்டி வழக்கம்போல தனது கலகலப்பான குணத்தையே மெயின்டெயின் செய்து கொண்டிருந்தார். அதிலும் லாஸ்லியா இவரை செய்தியாளரை போல் பேட்டி கண்ட தருணம் மிகவும் சுவாரஸ்யமாகவே அமைந்திருந்தது.