பிக் பாஸ் வீட்டில் இந்த மூணு பேரும் திமுகவின் கைக்கூலிகள்- சர்ச்சை பிரபலம் சுச்சி போட்ட ஷாக்கிங் ட்வீட்.

0
2807
Aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நடிகை ரேகா நடிகை ரம்யா பாண்டியன் வேல்முருகன் ஆரி என்று ரசிகர்களுக்கு பரிச்சயமான பலர் இருக்கிறார்கள். இதில் நடிகர் ஆரி முதல் நாளிலேயே ரியோவிற்கு போர்வை போர்த்திவிட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அது போக இவர் மற்ற போட்டியாளர்கள் இடம் பேசும் முறையை கண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் மூன்று திமுக அடிமைகள் இருப்பதாக பிரபல பாடகியான சுசித்ரா குற்றம்சாட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆர் ஜேவும் பின்னணி பாடகியுமான சுசித்ரா பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டர் பக்கத்தில் சுசிலீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவை சார்ந்த பல்வேறு பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களையும் ரகசியங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் இது குறித்து தெரிவித்த சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய பெயரில் வேறு யாரோ இதை எல்லாம் செய்கிறார் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பாடகி சுசித்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரி, வேல்முருகன், சோம் சுந்தர் ஆகியோர் குறித்து குற்றம் சாட்டி இருக்கிறார். இதுகுறித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ள சுசித்ரா ‘ ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது ஆரி மாணவர் சமூகத்தை திமுக சார்பாக அணிதிரட்டினார் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இந்த மூன்று பேரும் பிக் பாஸ் வீட்டில் ‘விவசாயி’ என்று சொல்வதை நிறுத்த மாட்டார்கள். விவசாயியா ? அவங்களுக்கு என்ன இப்போ என்று கூறியுள்ளார்.

https://twitter.com/suchi_mirchi/status/1313397093952712704

சுசித்ராவின் இந்த பதிவை கண்ட ட்விட்டர் வாசி ஒருவர் ‘உங்களுக்கு நான் ஒன்றை நினைவு படுத்துகிறேன்; கடந்த எம்பி தேர்வில் திமுக தான் வெற்றி பெற்றது’ தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது’ திமுகவிற்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். ஆனால், நீங்கள் 16 பேரில் அந்த மூன்று பேரை மற்றும் குறிப்பிட்டு சொல்கிறீர்கள். விவசாயி குறித்து பேசினால் உங்களுடைய பிரச்சனை’ என்ன என்று கேள்வி கேட்டிருந்தார்.

-விளம்பரம்-
https://twitter.com/suchi_mirchi/status/1313395671597113344

இதற்கு பதிலளித்துள்ள சுசித்ரா ‘விவசாயின்னு சொன்னா பத்தாத. விவசாயிக்கு என்ன இப்போ ? திமுக பிக்பாஸ நல்லா திட்டமிட்டு ஒரு வாகனமாக பயன்படுத்துகிறது. விவசாயின்னு முதல் நாளே ஒரு நாளைக்கு பத்து தடவை சொன்னால் பத்தாது. மேலும் அவருடைய பேரு சோமுவோ/சொம்புவா ? எனக்கு சரியாக தெரியவில்லை அவர் ஆரிக்கு நல்லா சொம்படிக்கிறார். என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement