செய்தி வாசிப்பை விட்டுவிட்டு பட வாய்ப்புகளை விட்டுவிட்டு பிக் பாஸில் வந்தது ஏன் – அனிதா சம்பத் விளக்கம்.

0
1298
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் நான்காம் தேதி கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் அதில் அனிதா சம்பத் ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
anitha

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அனிதா சம்பத் சுரேஷ் சக்ரவர்த்தி விவகாரத்தில் அனிதா சம்பத்தின் பெயர் கொஞ்சமாக துவங்கியிருக்கிறது இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான காரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்’ பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு..7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை.
“உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம்,சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க..நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க”

View this post on Instagram

பெத்த புள்ளய விட்டுட்டு போற மாதிரி என்னமோ ஒரு கனமான உணர்வு..7 வர்ஷமா இந்த கேமரா கூட தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன்..7 வர்ஷ செய்தி வாசிப்பு..எனக்கு சோறு போட்ட வேலை மட்டும் இல்ல ..நான் நேசிச்ச, நான் ஏங்குன, நான் கனவு கண்ட, எனக்கு புடிச்ச வேலை.. . "உனக்கு அப்பறம் வந்த புது பொண்ணுங்கள்ளாம்,சீரியல் ஷோ அது இதுனு வளந்துட்டாங்க..நீ ஏன் இன்னும் நியூஸயே படிச்சிகிட்டு வளராம இருக்கனு நிறைய பேர் கேப்பாங்க" . திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்…அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்.. . கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்! . நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு..! . உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு.. . அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு.. . வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்..முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல…. . இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!! . எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து..உள்ளே! நான் நானாக!! This official page is temporarily handled by admin @itsme_pg

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

திடீர் ட்ரெண்டிங்க்கு பிறகு செய்தி வாசிப்பு தவிர பல வாய்ப்புகள் வரும் போதும்…அதுல நிறையவே சம்பாதிக்கலாம்னு தெரிஞ்சும்..நான் எந்த வாய்ப்பையும் ஏத்துக்கல..அடுத்து எடுத்து வக்கிற அடி நல்ல வாய்ப்பா நம்ம மனசுக்கு சரினு பட்டா மட்டும் தான் ஏத்துக்கணும்னு கடந்த 2 வர்ஷமா செய்திகளை விடாம இருந்தேன்.
கடைசியா இப்போதைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம்!
.
நான் பிரம்மிச்சு பார்த்த ஒரு உலக தர கலைஞனின் பக்கத்துல நிக்கிர வாய்ப்பு.
உலகத்து சினிமாக்காரன்லாம் வாய பொலந்து வியந்த ஒரு நடிகன் என் பெயர உச்சரிக்க போகிற ஒரு வாய்ப்பு. அவர் பக்கதுல நின்னு பேசி இருக்கேன்னு என் அடுத்த சந்ததிக்கிட்டயும் சொல்லி சொல்லி பெரும பட்டுக்க கூடிய ஒரு வாய்ப்பு..
.
வெற்றி பெருவதெல்லாம் வேற விஷயம்..முதல்ல இந்த வாய்ப்பு என்பதே அவ்ளோ எளிதில கிடைக்க கூடிய வாய்ப்பு இல்ல….
.
இத கண்டிப்பா experience பண்ணனும்னு தான் இந்த முடிவு!!
.
எப்போதும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து..உள்ளே! நான் நானாக!!

-விளம்பரம்-
Advertisement