கஷ்டப்பட்டு எடுத்த என் பேர கெடுத்துக்க கூடாதுனு பாக்குறேன் – கண்கலங்கி அழுத அனிதா சம்பத்.

0
1018
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதுவரை போட்டியாளர்கள் 3 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கழித்துள்ளனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக போட்டியாளர்களை பற்றிய உண்மை குணம் அவ்வப்போது எட்டிபார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதே போல பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இது முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை. கடந்த சில தினங்களாக திங்கள் கிழமை துவங்கிய டாஸ்க் தொடர்ந்தது அதில் பாலாஜி மற்றும் அனிதா ஹார்ட் கொடுக்கும் டாஸ்கை செய்து முடித்தனர். அப்போது அனிதா, நிஷாவை தனது அம்மாவுடன் ஒப்பிட்டு கண் கலங்கி அழுதார்.

- Advertisement -

அதே போல சுரேஷ் சக்கரவர்த்தி ‘சிலர் வணக்கம் சொன்னால் எச்சி தெறிக்கும்’ என்று அணிதாவிடம் சொன்னதை அனிதா கொஞ்சம் திரித்து பேசி ‘செய்தியாளர்கள் வணக்கம் சொன்னால் எச்சி தெறிக்குமா’ என்று கொஞ்சம் திரித்து பேசி ஒரு சின்ன பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அதே போல போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடத்த மகிழ்ச்சியான அல்லது மறக்க முடியாத அனுபவங்களை பகிருமாறு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்தார்.

அதில் வேல் முருகன் சிறு வயதில் தான் சாப்பாட்டிற்கு பட்ட கஷ்டத்தை கூறினார் சனம் ஷெட்டி தான் 22 அடியில் இருந்து விழுந்த கதையை கூறினார். நிஷா, கருப்பாக இருந்ததால் தனது வாழ்வில் பட்ட கஷ்டத்தை கூறினார். இதை தொடர்ந்து ரேகா, ஆரி, கேபி என்று பலரும் தங்களது கதைகளை சொல்லி மமுடித்தனர்.

-விளம்பரம்-
Advertisement