துவங்கியது முதல் வாரத்திற்கான நாமினேஷன் – இந்த ரெண்டு பேர் தான் டார்கெட்.

0
903
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று கிழமை (அக்டோபர் 4 ) துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிகரமாக நேற்றோடு வெற்றிகராக முதல் வாரத்தை நிறைவடைந்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை போட்டியாளர்கள் நான்கு நாட்கள் கழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே எந்த ஒரு பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. இடையில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தை சுரேஷ் சக்கரவர்த்தி விட்டாலும் அனிதா சம்பத் விடாமல் அடிக்கடி சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்து வருகிறார். இது ஒருபுறமிருக்க இந்த வாரம் பிக்பாஸ் ஸ்டால் ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த உரிமையும் கிடையாது. இருப்பினும் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிக்பாஸில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை கூறவேண்டும் அப்படி கூறும் சிறந்த 8 போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள். மீதமுள்ள 8 பேர் நேரடியாக அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருப்பார்கள். இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா, அஜீத், ஷிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எனவே அடுத்த வாரம் நடைபெறும் ஏவிசிஷனில் இந்த 8 பேரில் யாரோ ஒருவர் வெளியேற போகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அடுத்த வாரத்திற்கான தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் ஷிவானி, சுரேஷ், ரேகா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இதில் இந்த வார தலைவராக சுரேஷ் தேர்ந்துடுக்கபட்டுள்ளார். எனவே, இந்த வாரம் சுரேஷ்ஷை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

-விளம்பரம்-
Advertisement