மீரா மிதுனை சூப்பர் மாடல் என்று மறைமுகமாக கலாய்த்த சம்யுக்தா – சனம் ஷெட்டி என்ன சொன்னார்னு கவனிசீங்களா.

0
1158
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு போட்டியாளர்கள் பலவீனம் அடைந்தார்கள் அந்த வகையில் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து மீராமிதுன் தான் மாடல் அழகியும் நடிகையுமான மீராமிதுன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவர் ஏகப்பட்ட கெட்ட பெயரோடு வெளியேறினார்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அடங்காத இவர் தொடர்ந்து போட்டியாளர்களை பற்றி அவதூறாக பேசி வந்தார், அப்போதும் இவருக்கு பெரிய பிரபலம் ஏற்படவில்லை, இதனால் தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய் சூர்யா என்று உச்ச நட்சத்திரங்கள் விமர்சித்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக் கொண்டு வருகிறார் மீராமிதுன். இவர் எந்த பேட்டியில் பங்கு பெற்றாலும் தான் ஒரு சூப்பர் மாடல் என்று குறிப்பிடுவது வழக்கமான ஒன்று தான்.

- Advertisement -

ஆனால் உண்மையில் இவர் சூப்பர் மாடல் இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் மீரான் மிதுனின் சூப்பர் மாடல் பட்டத்தை மறைமுகமாக கலாய்த்திருக்கிறார் மாடலும் நடிகையுமான சம்யுக்தா. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து பேசி வந்தனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் சம்யுக்தா பேசுகையில் தான் ஒரு மாடல் தான். நான் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் என்னை நான் சூப்பர் மாடல் என்று அழைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னதும் போட்டியாளர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். காரணம் இவர் மீரா மிதுனை தான் செல்கிறார் என்பது பார்வையாளர்கள் உட்பட அனைவருமே வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. தமிழ் சூப்பர் மாடல் என்று சொன்னதும் கைதட்டிய மற்ற போட்டியாளர்களில் சனம் ஷெட்டி கண்டெண்ட் இதுதான் இன்றைய ப்ரோமோ கண்டெண்ட் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சனம் ஷெட்டி தற்போது பெற்றுள்ள மிஸ் சௌத் இந்திய 2016 ஆம் ஆண்டு பட்டம் முதலில் முதலில் மீரா மிதுனுக்கு தான் வழங்கப்பட்டது. மீராமிதுன் மோசடி செயல்களில் ஈடுபட்டதால் அவர் பெற்ற அந்த பட்டம் நிராகரிக்கப்பட்டு அந்த போட்டியில் இரண்டாவதாக வந்த சனம் ஷெட்டிக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் கூட சனம் ஷெட்டி , மீரா மிதுனின் பேச்சுக்களை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement