நேற்றய பிக் பாஸில் அஸ்வினை கேலி செய்தாரா கமல் ? பங்கமான நெட்டிசன்களின் கமண்ட்ஸ். அப்படி என்ன சொன்னார் ?

0
619
aswin
- Advertisement -

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிவடைந்த ‘குக் வித் கோமாளி’ 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றவர் அஸ்வின். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துள்ளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-74-1024x516.jpg

அஸ்வின் சர்ச்சை பேச்சு :

இருந்தாலும் இவர் குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். தற்போது அஸ்வின் அவர்கள் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

வச்சி செய்த நெட்டிசன்கள் :

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை நான் 40க்கும் மேல் கதைக் கேட்டு தூங்கி இருக்கிறேன். இந்த படம் நன்றாக வர வில்லை என்றால் படத்தை வெளியிடும் அனுமதிக்கமாட்டேன் என்று பேசி இருந்தார். இது பெரிய சர்ச்சையாக வெடித்து அவரை பலர் கலாய்த்து வந்த நிலையில் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் அஸ்வின்.

This image has an empty alt attribute; its file name is 1-169-1024x495.jpg

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல், அஸ்வினை கேலி செய்ததாக நெட்டிசன்கள் கிளப்பி இருக்கின்றனர். நேற்றய நிகழ்ச்சியில் தாமரை மற்றும் ராஜுவிடம் பேசிக்கொண்டு இருந்தார் கமல். அப்போது ராஜு தூங்கிய போது கேப்டனாக இருந்த தாமரை சொல்லியும் ராஜு கேட்காததால் தாமரைக்கும் ராஜுவிற்கும் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது.

-விளம்பரம்-

சிலபேர் பேசினால் தூக்கிடுவாங்க :

இதுகுறித்து சொன்ன இந்த வார தலைவர் தாமரை ‘ராஜுவிடம் நீ தூங்காதே தூங்காதே அவர்களையும் நீ பார்த்துக் கொள் நீ பேசினால் கண்டிப்பாக தூங்கவிடாமல் செய்யலாம் என்று தெரியும் என்பதால் ராஜுவிடம் அப்படி நான் சொல்லி இருந்தேன் என்று தாமரை கூறியிருந்தார் அப்போது கமல் பேசினால் தூக்கம் வராது என்று யார் சொன்னது வெளியில் கேட்டுப்பாருங்கள் சிலபேர் பேசினால் தூக்கிடுவாங்க’ என்று கூறினார் கமல்.

நெட்டிசன்களின் கமண்ட்ஸ் :

தற்போது கமல் பேசிய இந்த வார்த்தையுடன் அஸ்வினை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே 40 கதையை கேட்டு நான் தூங்கிவிட்டேன் என்று அஸ்வின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவருக்கு 40 கதை அஸ்வின், ஸ்லீப்பிங் ஸ்டார் என்று பல பட்டங்களை கொடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement