வித்யாசமாக நடந்த நாமினேஷன். யார் ? யாரை காப்பாற்றியது – நாமினேஷனுக்கு வந்த 9 போட்டியாளர்கள்.

0
338
bb
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 4 வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் போட்டியாளராக நாடியா வெளியேறிய நிலையில் , அபிஷேக் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர். கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் சின்ன பொண்ணு வெளியேற்றப்பட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனின் நான்காம் நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், இந்த வாரம் தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோட் தொடர்ந்து 4 மணி அதாவது இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நான் என்பதால் இந்த வாரத்திற்கான நாமிநேஷன் நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு வித்தியாசமான முறையில் நாமினேஷன் நடைபெற்றது. அதில், ஒவ்வொரு போட்டியாளர்களின் புகைப்படமும் ஒரு பெரிய ராக்கெட் வெடியில் ஒட்டி வைக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் உள்ள இரண்டு போட்டியாளர்களை இந்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்றலாம் என பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதில் யார் யார் ? யாரை காப்பற்றினார்கள் என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

பிரியங்கா – மதுமிதா, இசைவாணி

அபிநய் – பிரியங்கா, ராஜு

மதுமிதா – பிரியங்கா, பாவனி

நிரூப் – அண்ணாச்சி, பிரியங்கா

சுருதி – தாமரை, இசைவாணி

அக்ஷரா – தாமரை, ஐக்கி

தாமரை – ராஜு, ஐக்கி

இமான் அண்ணாச்சி – ராஜு, நிரூப்

சிபி – மதுமிதா, அண்ணாச்சி

ஐக்கி – தாமரை, அண்ணாச்சி

பாவனி – சுருதி, அபிநய்

இசைவாணி – தாமரை, சுருதி

ராஜு – அண்ணாச்சி, நிரூப்

இந்த வாரம் வருண, பிக் பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் இந்த வாரம் அவர் நாமினேஷனில் இடம்பெறும்வில்லை. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் முடிவில் அக்ஷரா, சிபி, நிரூப், மதுமீதா, ஐக்கி பெர்ரி, பாவனி, இசைவாணி, அபிநய், சுருதி என்று 9 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில்  கடந்த வாரம் முழுவதும் தாமரை – ஸ்ருதி இடையே பிரச்னை இருந்த நிலையில், ஸ்ருதி, தாமரையை காப்பாற்ற நினைப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement