‘எதுக்கு நீ பாவனி பற்றி பேசுற, மன்னிப்பு கேளு’ – மீண்டும் பாவனி பற்றி பேசிய போட்டியாளர். கடுப்பான அமீர்.

0
596
ameer
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் . அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

-விளம்பரம்-

அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டாஸ்க்கில் கூட சிபி, அநபிய்க்கும் பாவனிகும் இருப்பது நட்பும் இல்லை காதலும் இல்லை. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் உறவு பற்றி யாருக்கும் புரியவில்லை என்று கேள்வி கேட்டிருந்தார் இதற்கு ஒரு சிலர் ஆம் என்றும் ஒரு சிலர் இல்லை என்றும் கூறி இருந்தார்கள்.

- Advertisement -

அவ்வளவு ஏன் அமீர் கூட இதற்கு ஆம் என்று தான் சொல்லி இருந்தார். பாவனி விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளாக இருந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல்.

இருப்பினும் இனி பாவனி யாரிடம் பேசினாலும் அது பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று கூறி இதற்க்கு ஒரு முட்டுபுள்ளி வைத்தார். இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாம் ப்ரோமோவில் சிபி, அமீரிடம் டாஸ்க்கின் போது மீண்டும் பாவனி பற்றி பேசியதால் கடுப்பான அமீர், சிபியிடம் சாண்டியிடுகிறார். இதற்க்கு சஞ்சீவ்வும், சிபி பேசியது தவறு என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement