பிக் பாஸில் இருந்து வந்த சில நாளில் கொரோனா – தனிமைபடித்துக்கொண்டு டாப் 5வில் வந்த போட்டியாளர். யார் தெரியுமா ?

0
281
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகை பாவனி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. ஆனால், இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னர் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதோடு பாவனி வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி சீரியல்களிலும், படங்களிலும் நடித்து இருக்கிறார்.பிக் பாஸில் இருந்து வெளியேறிய சில நாட்களில் கொரோனா – தனிமைப்படுத்திக்கொண்ட டாப் 5வில் வந்த போட்டியாளர்.

-விளம்பரம்-
May be an image of 5 people, people standing, people sitting, indoor and text that says "Pree Preethi ADITY ARAI GROUP"

இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ப்ரதீப் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவர் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி:

மேலும், இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதுவரை கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருந்தார்கள். மேலும், ஆரம்பத்தில் பிக் பாஸ் போட்டியில் 18 பேர் கலந்து இருந்தார்கள். வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ஆனந்தம், சந்தோஷம், கும்மாளம் என்று இருந்தாலும் போகப்போக போட்டி சச்சரவு சலசலப்பு என்று கலவரமாக இருந்தது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பாவனி:

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பாவனி வந்தார். இருந்தும் அவரை மக்கள் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.அதோடு பிக் பாஸ் சீசன் 5 இறுதி போட்டியாளர்களாக பவானி, பிரியங்கா, ராஜு, நிரூப், அமீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும், எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார்.

-விளம்பரம்-

பாவனிக்கு கிடைத்த சம்பளம்:

இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாம் இடத்தை பவானி பிடித்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் பவானி ரெட்டிக்கு ஒரு வாரத்திற்கு – 1.25 லட்சம் என்று பேசப்பட்டது. இவர் மொத்தம் 105 நாட்கள் வீட்டில் இருந்தார். ஆகவே மொத்தமாக 18.75லட்சம் பாவனிக்கு தரப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் பைனலிஸ்ட்க்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, பாவனி தான்.

pavni

பாவனிக்கு கொரோனா தொற்று:

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு போட்டியாளர்கள் அனைவரும் ஏழு நாட்கள் குவராடைனில் இருக்கனும் என்றும், அது முடிந்த பிறகு தான் வெளியே போகணும் என்று சொன்னார்கள். இப்படி ஒரு நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அவரே சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய அனைத்து நல விரும்பிகளுக்கும், எனக்கு சில லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. நான் என்னை வீட்டிலேயே தனிமைபடுத்திகொண்டு மருத்துவ அறிவுரைகளையும் பின்பற்றி வருகிறேன். மீண்டு வர காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் பாவனியின் பதிவு:

இப்படி இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இன்னும் யார் யாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதோ? என்று கேள்வி கேட்டு கேட்டு வருகிறார்கள். அதேபோல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் நிகழ்ச்சியை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement