அக்ஷரா எழுதி காட்றாங்கனு சொன்ன பிரியங்கா – அப்போ இது என்ன ? பிரியங்காவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
3333
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றாலே போதும் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பிரியங்கா பெயர் தான். அந்த அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் பிரியங்கா. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக கலந்து உள்ளார்.

-விளம்பரம்-

வழக்கம் போல் ப்ரியங்கா பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய நகைச்சுவையும், அட்டகாசத்தையும் காண்பித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா, அக்ஷ்ராவை கார்னர் செய்கிறார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் பிரியங்காவுக்கும் அக்ஷராவுக்கும் மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அது என்னன்னா, பிரியங்கா நான் சத்தமாக பேசுறதினால் நீ நல்ல பொண்ணு என்று வெளியில் பார்க்கிற மக்களுக்கு வேற மாதிரி தெரியும். நீ எது பேசுனாலும் நேரடியாக பேசு. ஏன் காகிதத்தில் எழுதி அதை ரகசியமாக வைத்து பாத் ரூமில் போடுற. நீ என்ன எழுதற என்று எங்களுக்கோ, பிக் பாஸ்க்கோ, மக்களுக்கோ தெரியாது.

- Advertisement -

ஆனால், நீ பண்ணறதை பார்த்தால் நாங்கள் ஏதோ உன்னை டார்கெட் பண்ணுற மாதிரி வெளியில் தெரியும். எது ரொம்ப தப்பு, அசிங்கமாக இருக்கு என்று பிரியங்கா கூறினார். உடனே அக்ஷராவுக்கும் ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இதே பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிரூப்பிடம் அக்ஷரா பற்றி கிசு கிசுத்தப்போது அவரின் நிரூப் கையை பிடித்து ஏதோ தனது விரலால் எழுதி காட்டினார். தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், உனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்று கிண்டலடித்து, களாய்த்தும் வருகிறார்கள். மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதுக்கு முன்னாடி நீ சரியா இரு என்று கடுமையாக கண்டித்தும் ரசிகர்கள் வருகிறார்கள்.

எப்ப பாரு பிரியங்கா அக்ஷராவை கார்னர் பண்றாங்க என்று அக்ஷரா ரசிகர் கூட்டம் கொந்தளித்து போய் பிரியங்காவின் இந்த வீடியோவை குறும்படம் என்று கிண்டலடித்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். இதேபோல் தொகுப்பாளினி அர்ச்சனாவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் தான் கடந்த பிக் பாஸ் சீசனுக்கு வந்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அன்பு தான் ஜெயிக்கும், அன்பு தான் எல்லாமே என்று சொல்லிக்கொண்டு ஒரு தலைபட்சமாக நடந்ததார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இவருடைய பெயர் கெட்டது. அதேபோல் தான் தற்போது பிரியங்கா செய்து கொண்டு வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் என்ன நிலைமை கிடைக்கும் என்று பொறுத்து இருந்து

-விளம்பரம்-
Advertisement