பிக் பாஸில் இருந்து வெளியேறிய நமீதா – இந்த ப்ரோமோவில் கூட அவர் இல்ல நோட் பண்னீங்கள.

0
13124
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர்.மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிரபல பிக் பாஸ் லீக்ஸ் பிரபலமான இமாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே போல ஜோ மைக்கேலும், நமீதா விரைவில் நிகழ்ச்சிக்கு திரும்புவார் என்று பதிவிட்டுள்ளார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூட நமிதாவை காணவில்லை.

This image has an empty alt attribute; its file name is 1-81-724x1024.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதேபோல கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது நமீதா மாரிமுத்து ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாக பேசி திருநங்கைகளின் பிரச்சினை குறித்து பேசியிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு நமிதா வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியான விஷயமாக அமைந்திருக்கிறது

-விளம்பரம்-
Advertisement