இப்படி அருவருப்பான விஷயத்தை செஞ்சிட்டு அவர் மன்னிப்பு கேக்காததற்கு காரணம் இதான் – ராஜுவை வெளுத்து வாங்கிய ஜேம்ஸ் வசந்தன்.

0
556
raju
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து வருகிறது. அதே போல அடிக்கடி பிக் பாஸ் வீட்டில் எதாவது ஒரு சர்ச்சை எழுந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் நேற்று ராஜு செய்த விஷயம் தான் பேசு பொருளாக ஆகி இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு truth or dare என்ற விளையாட்டு டாஸ்க்காக கொடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

மிகவும் ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்த இந்த டாஸ்கில், ராஜு பாட்டிலை சுற்றிய போது அபிநய்யிடம் ‘பாவனியை லவ் பண்றீங்களா’ என்று கேட்டது பலரை ஷாக்கில் ஆழ்த்தியது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநய் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று திகைத்துப்போனார். அதன் பின்னர் இல்லை என்று கூறினார்.

- Advertisement -

இந்த டாஸ்கின் போது ராஜு கேட்டதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சிறிது நேரம் கழித்து ராஜு சொன்னது தவறு என்று பலர் கூறினர். அதிலும் குறிப்பாக பிரியங்காவிடம் ராஜு, நான் கேட்டது தப்பா என்று கேட்டதர்க்கு மிகவும் கேவலமான கேள்வி அது என்று கூறி இருந்தார். அத்தெரு போல ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் ஒருவரையும் கணவரை இழந்த பெண் ஒருவரையும் ராஜு இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘பாவனி கைம்பெண் அவரை எப்படி ராஜு இப்படி சொல்லலாம், இப்படி அருவருப்பான விஷயத்தை செய்துவிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் சிறுமைபட்டு விடுவோம் என்று தான் ராஜு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அதில் பாவனி இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்பதால் ராஜுவால் மன்னிப்பு கேட்க முடிவவில்லை. என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ராஜு இப்படி பாவனியிடம் பேசி சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பஞ்ச பூத டாஸ்கின் போது ஸ்ருதிக்கும், தாமரைச்செல்விக்கும் இடையிலான பிரச்சனை பயங்கரமாக முற்றியது. அப்போது வீட்டில் ராஜு உட்பட தாமரைக்கு ஆதரவாக தான் பேசினர். ஆனால், பாவனி மட்டும் சுருதிக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

அப்போது ராஜு – பாவனி இருவருக்கும் சில வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து ராஜு, பாவனியிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, ட்ரஸ் மாத்தும் போது எப்படி எடுப்பீர்கள். நான் இப்போ உங்களிடம் இருந்து காயினை எடுக்க வேண்டும், நீங்க ட்ரெஸ் மாத்தும் போது விடுவீங்களா என்று கேட்டு இருந்தது அப்போது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement