முதல் ரெண்டு இடம் ராஜு, பிரியங்கா சரி, மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார். சரியான போட்டி போய்ட்டு இருக்காமே.

0
469
biggboss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆண்டு தான் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்கள் தான் அதிகம் இருந்தார்கள். மேலும், பல விறுவிறுப்புடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளார்கள்.

- Advertisement -

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்கள்:

பிரியங்கா, பவானி, ராஜு, நிரூப், அமீர் என இந்த பேரும் தான் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். மேலும், இந்த வாரம் பதிவு செய்யப்படும் வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்றவர் தான் டைட்டில் வின்னர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் இதுவரை வந்த தகவலின் படி ராஜு தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

வாக்குகள் பட்டியல்:

இவரையடுத்து பிரியங்கா உள்ளார். அதுமட்டுமில்லாமல் ராஜுவுக்கும், பிரியாவுக்கும் இடையேயான வித்தியாசம் அதிகமாக இருப்பதால் ராஜு தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட சோஷியல் மீடியாவில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மூன்றாவது இடத்திற்கு பவானி மற்றும் நிரூப்பிற்கு தான் கடும் போட்டி நிலவி வருவதாக வந்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பவானி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் 11 முறை நாமினேஷனில் பவானி வந்தார்.

-விளம்பரம்-

மூன்றாம் இடத்தை பிடிக்கும் பவானி:

இருந்தும் அவரை மக்கள் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பவானி பிடித்து விடுவார் என்று கூறப்படுகிறது. மேலும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் நிரூப் மற்றும் அமீர் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். அதேபோல் கண்டிப்பாக ராஜூ டைட்டில் வின்னர் அடிப்பார் என்பதே அனைவரும் எதிர்பார்க்கப்படுகிற ஒன்று.

பவானி ரெட்டி நடித்த சீரியல்கள்:

மேலும், பவானி ரெட்டி சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகை தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியலில் நடித்து இருந்தார். இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ‘ரெட்டை வால் குருவி’ மற்றும் ‘தவணை முறை வாழ்க்கை’ ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், ப்ரதீப் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் பவானி தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.

Advertisement