பிக் பாஸில் Wild Card போட்டியாளராக நுழையும் தினேஷ் – ரஷிதாவின் கனவை நிறைவேற்றுவாரா?

0
507
Dinesh
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் Wild Card எண்ட்ரியாக நுழைய இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் Wild card குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.வழக்கமாக பிக் பாஸ் சீசன்களில் ஒன்று அல்லது இரண்டு Wild card போட்டியாளர்கள் தான் வருவார்கள். ஆனால், இந்த முறை 5 Wild கார்ட் போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். எனவே இந்த வாரம் Double Eviction இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த முறை ஐந்து பேர் Wild card என்ட்ரி ஆக இருக்கின்றனர்.

- Advertisement -

5 Wild Card போட்டியாளர்களில் முதல் இரண்டு Wild Card போட்டியாளர்களாக ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் பின்னணி பாடகர் கானா பாலா ஆகியோர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முந்தைய சீசனில் வந்து கலந்து கொண்ட திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் பிரவீனா மாயா, மற்றும் மேடை பேச்சாளர் அன்ன பாரதி ஆகியோரின் பெயர்கள் அடிப்படு கிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த wild card லிஸ்டில் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் பெயரும் இணைந்து இருக்கிறது. தினேஷ் மற்றும் ரசிதா ஆகிய இருவரும் தற்போது தனி தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. அவர்கள் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாவும் தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் இரவவோடு இரவாக ரஷிதா புகார் அளித்தார் ரஷிதா. ஆனால், சமீபத்தில் ரக்ஷிதாவின் தந்தை காலமான போது தினேஷ், பெங்களுருக்கு சென்று இறுதி சடங்கில் கலந்துகொண்டு இருக்கிறார்.

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய தினேஷ் இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். கடந்த சீசனில் கலந்து கொண்ட ரச்சிதா டைட்டில் வாங்க ஆசைப்பட்டாங்க. அது நடக்கலை. என்னால் முடிஞ்சா அந்த டைட்டிலை நான் வாங்கி அவர்களுக்குச் சமர்ப்பணம் பண்ணுவேன்’ என்று கூறி இருந்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, சீசன் 7 தொடங்கிய போது இவர் உள்ளே செல்லவில்லை.

Advertisement