டபுள் எவிக்ஷன் : டேஞ்சர் சோனுக்கு வந்த 4 பேர் கடைசியில் வெளியேறியது யார் தெரியுமா?

0
479
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 54 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா தேவி, மகேந்திரன், பிரதீப், அன்னபாரதி, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து அனல் பறந்து கொண்டு சென்றிருக்கிறது. இந்த வாரம் நிகழ்ச்சியில், உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ரொம்ப எமோஷனல் ஆக பேசி இருந்தார்கள்.

- Advertisement -

குறிப்பாக, விசித்திரா பேசி இருந்தது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பலரும் விசித்திராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இன்னும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக வாரத்தின் தொடக்கத்தில் பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும். அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம். தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ். அதன்படி இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்களும் திறமையாக விளையாடினார்கள்.

-விளம்பரம்-

ஆனால், இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்று விட்டார்கள். ஒன்றில் மட்டும் தான் வெற்றி பெற்றார்கள். இதனால் இரண்டு வைல்ட் கார்டு நபர்கள் உள்ளே வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிராவோ- அக்ஷயா இருவரும் எலிமினேட் ஆகிருக்கிறார்கள். ஆனால், உள்ளே வரும் அந்த இரண்டு பேர் யார் என்பது தான் தெரியவில்லை. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதோட நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பிராவோ-அக்ஷயா இருவரும் பெரிதாக எந்த ஒரு ஈடுபாடுடனும் சுவாரசியமாகவும் விளையாட வில்லை. இவர்கள் இருவரும் ஏற்கனவே வெளியேறி விடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அக்ஷயாவை எல்லாம் அவர்களுடைய ரசிகர்கள் தான் இத்தனை நாட்கள் காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் வெளியேறி இருப்பது சரிதான் என்று பிக் பாஸ் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

Advertisement