டாப்பில் சென்ற விச்சு – அச்சு. பூர்ணிமாவா? ஐசுவா? இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

0
222
Aishu
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து ஆறாவது வாரத்தில் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 38 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகி இருக்கிறார். அதற்குப்பின் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் விசித்ரா, தினேஷ், அர்சனா, ஆர்.ஜே.பிராவோ, ஐஷூ மற்றும் பூர்ணிமா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரம் முழுவதும் இரண்டு வீடுமே ரணகளமாக இருந்தது. பெரிய பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அர்ச்சனாவை டார்கெட் செய்து இருந்தாலும் அர்ச்சனா விட்டுக் கொடுக்காமல் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார்.

பூர்ணிமா – ஐசு :

இவருக்கு உறுதுணையாக விசித்திராவும் நின்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் பிரதீப் வெளியேறியது குறித்து தான் இரு வீட்டார் போட்டியாளர்களுக்கும் மத்தியில் கலவரமே நடந்து விட்டது. மேலும், இந்த வாரம் நடந்த ஓட்டிங்கில் அர்ச்சனா, விசித்ராவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் பலருமே அர்ச்சனா, விசித்ராவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். பின் பிராவோ பெரிதாக எந்த விஷயத்திலும் தலையிடவில்லை என்றாலும் பூர்ணிமா, ஐசு செய்த செயல்கள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

வெளியேறியது யார் :

இதனால் பூர்ணிமா, ஐசுவில் யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐசு வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே நிகழ்ச்சியில் ஐஸு, நிக்சனுடன் நெருக்கமாக பழகியது, கண்ணாடியில் முத்தம் கொடுத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் இடத்திற்கே வந்து, என் மகளை வெளியே அனுப்பிவிடுங்கள். குடும்பமானமே போகிறது என்றெல்லாம் புலம்பி அழுந்திருந்தார்கள். பின் பிக் பாஸ் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள். தற்போது ஐசுவின் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement