தப்பித்த பவா, பிக் பாஸில் இருந்து முதல் வாரமே வெளியேறியது யார் தெரியுமா ? உறுதியான தகவல்.

0
1381
bava
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக எலிமினேட் ஆக இருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஐந்து நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்கு மத்தியில் கலவரம் தொடங்கி விட்டது.

நிகழ்ச்சியில் போட்டியாளர்கள்:

அதோடு கேப்டனால் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். மேலும், ஆரம்பத்தில் இருந்தே பிரதீப் ஆண்டனி-விஜய் வர்மா இருவருக்கும் செட் ஆகவில்லை.

-விளம்பரம்-

வீட்டில் நடந்த கலவரம்:

அதோடு கடந்த இரண்டு நாட்களாக விசித்திராவிற்கும் ஜோவிகாவிற்கும் இடையே நடந்த படிப்பு குறித்த சண்டைதான் ஹைலைட். ஜோவிகா ஆரம்ப நாளிலிருந்து தற்போது வரை நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். வனிதா போல் இல்லாமல் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வார இறுதியில் கமல் என்ன சொல்ல போகிறார்? என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த முதல் வாரத்தில் வெளியேறப் போகும் நபர் குறித்த தகவல்தான் வெளியாக இருக்கிறது.

முதலில் வெளியேறும் நபர்:

முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதுவரை பதிவாகி இருக்கும் வாக்குகளின் அடிப்படையில் தற்போது வரை குறைந்த அளவு வாக்குகள் பெற்றிருப்பது அனன்யா தான். இவர்தான் முதன் முதலில் பிக் பாஸை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement