நெருங்கும் பைனல், ஓட்டு வேட்டையில் PR டீம்ஸ் – அதிக PR வைத்திருப்பது இவர்கள் இருவர் தானாம்.

0
508
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7ல் தீவிரமாக வேலை செய்யும் பி ஆர் டீம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இன்னும் இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் தான் இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஆறு பேர் தான் இருக்கிறார்கள். இவர்கள் ஆறு பேரும் கடைசி வரை இருப்பார்களா? இந்த வாரமும் மிட் வீக் எவிக்ஷன் நடந்து யார் வெளியே செல்வார்கள்? என்று தெரியவில்லை.

டைட்டிலை வெல்பவர்கள்:

ஆக மொத்தம், டைட்டிலை அடிக்கப் போவது யார் என்ற பல கேள்விகளுடனும், எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இதுவரை ஒளிபரப்பாகி இருக்கும் ஆறு சீசன்களிலும் ஒரே ஒரு முறை மட்டும் தான் பெண் போட்டியாளர் டைட்டில் பட்டதை விட்டிருக்கிறார். அதுவும் இரண்டாவது சீசனில் ரித்விகா பெற்றிருந்தார். இதனால் இந்த சீசனிலும் ஒரு பெண் போட்டியாளர் டைட்டில் பட்டதை அடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது இருக்கும் பெண் போட்டியாளர்கள் மாயா, அர்ச்சனா தான்.

-விளம்பரம்-

பி.ஆர்.டிம் வைத்து இருப்பவர்கள்:

இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் டைட்டில் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு பேருமே நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே வெளியில் தங்களுக்காக வேலை செய்ய சில ஆட்களை வைத்து விட்டு தான் வந்திருக்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கூட பிஆர் ஒர்க் குறித்து பிக் பாஸ் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது போட்டியாளர் ஒருவர், எப்பெல்லாம் பொதுமக்கள் மத்தியில் பெயர் தப்பா அடிபடுகிற மாதிரி இருக்குமோ அப்ப அதை சரிக்கட்டும் விதத்தில் தங்களைப் பற்றி பாசிட்டிவான செய்திகளை வெளியிடுவது, வார இறுதியில் ஓட்டுகளை போடுவது, இதெல்லாம் தான் இந்த பி ஆர் டி வேலை.

பி.ஆர்.டிம் குறித்து சொன்னது:

ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்கள் இந்த மாதிரி பி.ஆர்.டிமை வைத்து தான் நிகழ்ச்சியில் நீடித்திருந்தார்கள். அந்த வகையில் இந்த சீசனில் யார் இப்படி பக்கா பிளானுடன் வந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அந்த வகையில் பலருமே மாயா, அர்ச்சனா பேரை தான் சொல்லி இருந்தார்கள். மாயாவுக்கு அவருடைய குடும்பத்தினரே இந்த வேலைகள் எல்லாம் செய்கிறார்கள் என்றும், அர்ச்சனாவுக்காக சீனியர் சினிமா நடிகர் ஒருவருடைய மகள்தான் இந்த வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. காரணம் இந்த வேலைகளை செய்தால் லட்சக்கணக்காக வருமானமும் கிடைக்கிறதாம். மேலும், மாயா,அர்ச்சனாவை தவிர வேறு யார் டைட்டில் பட்டதை வெல்வார்கள் என்று உங்களுடைய கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement