உங்களுக்கு கிளாப்ஸ் வரனும்னு என்ன வேனா பண்ணுவீங்களா – கூல் சுரேஷால் முதல் முறையாக அழுத மாயா.

0
448
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீடு இம்முறை இரண்டு வீடுகளாக பிரிந்து இருக்கிறது. ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் மெனுவை சமைக்க வேண்டும் என்ற ரூலும் இருக்கிறது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினுள் விஜய் வர்மா, கூல் சுரேஷ், பிரதீப், அக்ஷயா, விஷ்ணு, மாயா ஆகியோர் இருக்கின்றனர். ஸ்மால் பாஸ் வீட்டில் சென்றதில் இருந்தே இவர்கள் அனைவரும் பிக் பாஸ் நபர்களுடன் சண்டையிட்டு வந்தனர்.

- Advertisement -

இதுகுறித்து கமல் கூட விவாதித்து இருந்தார். மேலும் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருந்தது. எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பவா செல்லத்துரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

நேற்றய நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக யுகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கட்டதும் வாரம் முழுக்க ஈடுபாடு இல்லாமல் சுவாரசியம் குறைவாக திகழ்ந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்புமாறு பிக் பாஸ் கூறினார். அதன்படி மாயா, பிரதீப், விஷ்ணு,பூர்ணிமா, விக்ரம், வினுஷா ஆகியோரை யுகேந்திரன் தேர்தெடுத்தார்.

-விளம்பரம்-

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பூர்ணிமா மற்றும் மாயா இந்த வாரம் யாரை நாமினேட் செய்யலாம் என்று திட்டம் தீட்டி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருகிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் சமீபத்தில் நிறைவடைந்து. அதில் நிக்சன், அக்ஷயா, மணி விசித்ரா,ஐசு,விஜய்,மாயா,பூர்ணிமா,வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

கடந்தே வாரமே மாயா நாமினேட் ஆகி இருந்த போது அவருக்கு தான் பல தனியார் வலைதள ஓட்டிங் போலில் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது.எனவே அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவா செல்லதுரை வெளியேறிய காரணத்தால் எலிமிநேஷன் இல்லை என்று அறிவிக்கபட்டது. எனவே, இந்த முறை அவர் காப்பாற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement