என்ன அடிச்சி சாவடிச்சிட்டு வேனா இந்த இடத்த எடுத்துக்கோ – Ranking டாஸ்கில் வாக்குவாதம் செய்த பிரதீப்.

0
230
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து நான்காவது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

மேலும், கடந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

நேற்றய நிகழ்ச்சியில் விசித்ராவிற்கு மார்னிங் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளரின் நிறை மற்றும் அவர்கள் சரி செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயத்தை கூற வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் விசித்ரா ஒவ்வொருவர் பற்றியும் சொன்ன போது மாயாவை மறைமுகமாக தாக்கி பேசியதாக மாயா விசித்ராவுடன் சண்டை போட்டார். இந்த சண்டை கொஞ்ச நேரம் சென்றது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களின் வீட்டார் கன்பெக்ஷன் ரூமில் பேசி இருந்தார்கள். அதில் யாருடைய வீட்டாரின் பேச்சு உண்மையாக தெரிகிறதோ அவர்களுக்கு லைக்கும் முரண்பாடான பேச்சுக்கு டிஸ் லைக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் பிரதீப், கூல் சுரேஷ் மற்றும் வனிதா குடும்பத்தாரின் பேச்சை கேட்டார். பின்னர் ஜோவிகாவிற்கு தனது லைக்கை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ரவீனா, பிரதீப் மற்றும் மணிவீட்டாரின் பேச்சை கேட்டு பிரதீப்பிற்கு லைக் கொடுத்தார். இதனால் ரவீனா மீது கோபித்து கொண்டார் மணி. இப்படியாக நேற்றய எபிசோட் நிறைவடைந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த சீசனுக்கான Ranking டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதில் முதல் இடத்திற்காக கடுமையாக வாக்குவாதம் செய்து இருக்கிறார் பிரதீப்.

Advertisement