என் அர்நாகயிரு பத்திலாம் பேசுறாரு சார் – கமலிடம் போட்டு கொடுத்த பெண் போட்டியாளர்.

0
188
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி நிகழ்ச்சி தொடங்கி 33 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா இந்த ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசனில் முதல் வாரமே அனன்யா வெளியேற்றப்பட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். மேலும், அனைவரும் எதிர்பார்த்த wild card போட்டியாளர்களாக கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். ஆனால், இவர்களின் என்ட்ரி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் வந்த முதல் நாளே இவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸ் வீட்டார் அனுப்பி வைத்து இருக்கின்றனர். இவர்களுடன் விசித்திராவும் சென்று இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்ததில் இருந்து அவர்களுக்கும் ஏற்கனவே பிக் பாஸில் இருந்தவர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் மணி அடித்தது டாஸ்க்கில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற பிரதீப் சொல்லியிருந்தது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து நேற்று பன்ச் டயலாக் சொல்ல வேண்டும் என்று மார்னிங் டாஸ்கில் இருந்து தொடங்கப்பட்டது. இதில் அதிகம் பிரதீப்பை தான் டார்கெட் செய்து இருந்தார்கள். இதன் மூலம் மொத்த வீட்டின் போட்டியாளர்கள் மத்தியிலும் பிரதீப் பயங்கரமான வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நேற்றைய எபிசோடு:

பின் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி பன்ச் டயலாக் மூலம் வெறுப்பேற்றி இருக்கிறார்கள். அதற்கு பின் ஷாப்பிங் செலவை கட்டுப்படுத்துவதற்கான டாஸ்க் நடந்தது. பெரிய வீட்டில் இருந்து மூன்று பேர் சென்றார்கள். சின்ன வீட்டில் இருந்து ஒருவர் மேற்பார்வருக்கு சென்றார்கள். டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து விட்டது போல் விஷ்ணு தடுமாறி தோற்று விட்டார். மேலும், இந்த போட்டியில் பெரிய பிக் பாஸ் வீடு தோற்றதால் ஒருவர் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி இருந்தார்கள். இது தொடர்பாக வாக்கு எடுக்கப்பட்டது. அதில் அக்ஷயாவின் பெயர் தான் அதிக பேர் சொல்லி இருந்தார்கள். உடனே பிரதீப், ஜெயிலுக்கு போக என்னை நீங்க தேர்வு செய்யவில்லையா? அப்படி என்றால் என்னை மன்னிச்சிட்டீங்கன்னு அர்த்தமா? கமல் சார் எபிசோடில் இதை நான் சொல்லுவேன் என்று சந்தில் சிந்து பாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

கேப்டன்சி டாஸ்க்:

உடனே மற்ற போட்டியாளர்கள், இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. இது யார் ஜெயிலுக்கு போகின்ற வாக்கெடுப்பு மட்டும்தான் என்று சொல்கிறார்கள். ஒரு வழியாக அக்ஷயா சிறைக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் மணி அடித்ததா? இல்லையா? என்ற விவகாரத்தில் பிரதீப்- சுரேஷ் உட்கார்ந்து பேசி தங்களுடைய பஞ்சாயத்தை தீர்த்துக் கொண்டார்கள். பிறகு இந்த வாரம் முழுவதும் முழுமையாக பங்கெடுத்த இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் பிக் பாஸ் சொல்ல எல்லோரும் மாயா, சுரேஷ் ஆகிய இரண்டு பேர்களை சொன்னார்கள். இறுதியில் பிக் பாஸ் இது கேப்டன்சி என்று சொல்லி இருந்தது. அதற்குப் பிறகு சின்ன பிக்பாஸ் வீட்டிலும் வாக்கெடுப்பு நடந்தது.

இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ:

அதில் விசித்திரா தேர்வாகி இருந்தார். அதற்கு பிறகு மாயா, சுரேஷ், விசித்திரா மூவருக்கும் கேப்டன்சி டாஸ்க் நடந்தது. பேஸ்மென்ட் வீக்கு என்ற டாஸ்க்கில் விசித்ராவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தடுமாறி கீழே விழுந்து விட்டார். சுரேஷ் கொஞ்ச நேரத்தில் கீழே விழுந்தார். அடுத்தது யார் இந்த வாரக் கேப்டனாக மாயாதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றைய எபிசோடு காண இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கமல், செங்கொடியை உயர்த்தியவர்கள் மட்டும் சொல்லுங்கள் என்று சொன்னவுடன் ஜோவிகா,நிக்சன், மணி, விஷ்ணு, ரவீனா, மாயா,பூர்ணிமா ஆகிய எல்லோரும் பிரத்தீப்பை குறி வைத்து பேசுகிறார்கள். உடனே கமல், இதற்கு என்ன தண்டனை எனக்கு தெரியும் என்று கூறுகிறார்.

Advertisement