இத எதிர்பார்க்கவே இல்லையே – பூர்ணிமா மற்றும் மாயாவிற்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்

0
243
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து நான்காவது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

நேற்றய நிகழ்ச்சியில் Ranking Task நடைபெற்றது..இதில் பிக் பாஸில் தங்கள் தகுதியை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு விவாதிக்க வேண்டும் என்பதே டாஸ்க். இந்த டாஸ்கின் போது முதல் இடத்திற்காக பிரதீப் மற்றும் ஜோவிகாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரதீப், நீ மிடில் கிளாஸ் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறாய்.

எந்த ஒரு மிடில் கிளாசும் இவ்ளோ ஷூ, இவ்வளவு ஆடை வைத்து நான் பார்த்தது இல்லை என்று பேசினார். இதற்கு பதில் அளித்த ஜோவிகா, பிக் பாஸில் நான் ஆடும் கேமிற்கும் நான் போடும் ஷுவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்கு வாதம் நீள, பிரதீப் ஜோவிகாவை நாயே என்று சொல்லிவிட்டார். இதனால் நான் வார்த்தையை விட்டுவிட்டேன் அதனால் நான் கடைசி இடத்திற்கு சென்றுவிடுகிறேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாயா, ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை கேப்டன் பூர்ணிமா கேட்க இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டு இருக்கும் சண்டை உண்மையா பொய்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement