நான் வீட்டுக்கு போறேன் – மீண்டு ட்ராமாவை துவங்கிய கூல் சுரேஷ். பிக் பாஸ் கொடுத்த அறிவுரை

0
439
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பின் வைல்ட் கார்ட் மூலம் அனன்யா, விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட்டார்கள். கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது.

- Advertisement -

இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது.அதோடு கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது. அதிலும் அர்ச்சனா – நிக்சன் ஆகியோர் இடையே பெரும் சண்டை வெடித்தது. இந்த சண்டையின் போது நிக்சன், அர்ச்சனாவை படு மோசமாக பேசி இருந்தார்.

மேலும், இனி வினுஷா பத்தி யாராவது பேசுனீங்க ‘சொருகிடுவேன்’ என்று கூறி இருந்தது மற்ற போட்டியாளர்களை கூட கோபத்தில் ஆழ்த்தியது. நிக்சன் இப்படி பேசியதற்காக கடந்த வாரம் அவருக்கு Yellow Card கொடுக்கப்பட்டது.ஆனால், அவரை கண்டித்ததை விட தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணுவை தான் கமல் அதிகம் கண்டித்து இருந்தார். அதிலும் தினேஷ், நிக்சனை பார்த்து தொளலத் என்று சொன்ன வார்த்தைக்கு அவரை கடுமையாக எச்சரித்து இருந்தார் கமல்.

-விளம்பரம்-

ஆனால், இதை விட மோசமாக பேசிய பூர்ணிமா, மாயாவை இது வரை கமல் ஏன் கண்டிக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும், இந்த வாரம் 2 அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்க இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு நடந்துகொள்வதாக பிக் பாஸ் கடிந்துள்ளார். மேலும், கரன்சி விஷயத்தில் மாயா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற பிக் பாஸ் சுவர் மீது ஏறி இருக்கிறார் கூல் சுரேஷ். இதனால் அவரை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து பிக் பாஸ் ஆறுதல் கூறியுள்ளார்.

Advertisement