இப்படி தான் எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துவீங்களா – மாயாவால் அழுது புலம்பிய அர்ச்சனா.

0
380
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

இது பலருக்கும் அதிர்ச்சி தான். பின் நான்காம் வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் பூர்ணிமா ரவி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இந்த முறை ஓபன் நாமினேஷன் நடந்தது. அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் 5 wild card போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இந்தவாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நேற்றய நிகழ்ச்சியில் wild card போட்டியாளர்கள் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுத்த போது பிக் பாஸ் போட்டியாளர்களின் முகம் மாறியது. அதிலும் குறிப்பாக உள்ளே சென்ற தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகிய இருவருமோ சென்ற சிறிது நேரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களை டேமேஜ் செய்தனர்.

-விளம்பரம்-

இதனால் wildcard போட்டியாளர்கள் வந்தது தங்களுக்கு விருப்பமில்லை என்று சிலர் கூறி இருந்தனர். அதிலும் குறிப்பாக பூர்ணிமா, ஜோவிகா,மாயா ஆகிய மூவரும் புதிதாக வந்துவிட்டு எங்களை பற்றி எப்படி பேசலாம். கண்டிப்பாக இவர்களை தான் நாங்கள் நாமினேட் செய்யப்போகிறோம் என்று ஓப்பனாக கூறினார்கள். இப்படியொரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது.

அதில் Wild card போட்டியாளராக நுழைந்த போட்டியாளர்களையே பிக் பாஸ் வீட்டார், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா, வீட்டிற்கு வந்த தங்களை சரியாக அழைக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். இதனால் மாயாவிற்கும் அர்ச்சனாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்ட ஒருகட்டத்தில் அர்ச்சனா கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்.

Advertisement