கொளுத்திப் போடும் பிரியங்கா – முகத்திற்கு நேராக சொன்ன போட்டியாளர்.

0
13241
Priyanka
- Advertisement -

பிக் பாஸின் 5வது சீசன் இரண்டு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன்இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் யார் யார் இன்று காப்ற்றப்பட்டு இருக்கிறார்கள் என்ற நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது . கடந்த வாரம் முதல் வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேசன் நடைபெற்றது. இதில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரை செல்வியை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது. இதில் தாமரை செல்வி மற்றும் பாவனி தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களும் முதல் வாரத்திலேயே நாமினேட் செய்யப்பட்டனர்.

- Advertisement -

அதில், இசைவாணி – 6, நிரூப் – 5, அண்ணாச்சி – 4, சின்ன பொண்ணு – 3, அபிநய் – 3, அக்ஷரா – 3, சிபி – 2, சுருதி – 1,மதுமிதா – 1, நாதியா – 1, ராஜு – 1, ஐக்கி – 1, அபிஷேக் – 1, அபிநய் – 1, பிரியங்கா – 1, வருண் – 1 வாக்குகளை பெற்று இருந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் 10 பேர் காப்பாற்றப்பட்டு இருந்தனர்.

இதில் அபிஷேக், மதுமிதா, நாதியா, சின்ன பொண்ணு வருண் ஆகிய 5 பேரின் முடிவு அறிவிக்கப்படவில்லை. இதில் யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் நாதியா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாதியாவை அபிஷேக் ஒருவர் மட்டும் தான் நாமினேட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement