கண் கலங்கி பேசிய போது கூட அனைவரையும் சிரிக்க வைத்த தாமரையின் வெள்ளந்தி குணம்.

0
5991
thamarai
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். ராஜு ஜெயமோகன் அபிஷேக், அபிநய், வருண், இமான் அண்ணாச்சி அண்ணாச்சி, சிபி, நிரூப் என்று 7 ஆண் போட்டியாளர்களும் இசைவாணி, மதுமிதா ,பிரியங்கா, பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சங், ஸ்ருதி, அக்ஷரா ரெட்டி, ஐகி பெர்ரி, தாமரைச்செல்வி என்று 10 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் நேற்றைய நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத சில காரணங்களால் வெளியேறிவிட்டதாக பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

இதுவரை 5 நாட்கள் கடந்த நிலையில் நமிதா மற்றும் தாமரை செல்வி இருவருக்கு மட்டும் தான் கொஞ்சம் முட்டிக்கொண்டது. மற்றபடி போட்டியாளர்கள் இதுவரை ஜாலியாக தான் இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் ப்ரோமோவில், தாமரை செல்வி கண் கலங்கி பேசி இருக்கிறார். ஆனால், அப்போதும் தன் வெள்ளந்தி தனத்தால் அனைவரயும் சிரிக்க வைத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement