அட, இவர் கூட எஸ்கேப், பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ?

0
575
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நான்காவது எவிக்ஷனில் வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஒரு மாதம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அடுத்து என்ன வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் டாஸ்க்:

பின் அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இந்த ஐந்தாவது வாரம் பேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இனிப்புகளை தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி இருந்தார்கள். அட தேனடை, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடியிருந்தார்கள். இதில் பல கலவரங்களும், சர்ச்சைகளும் ஏற்பட்டிருந்தது.

-விளம்பரம்-

எவிக்ஷன் பட்டியல்:

இறுதியில் கண்ணா லட்டு தின்ன ஆசையா அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதில் இந்த வாரம் சிறந்த போட்டியாளராக ரக்ஷிதா தேர்வு செய்யப்பட்டிருந்தார். பின் இவர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பித்து விட்டார். இந்நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் அசீம் , விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் ,மகேஸ்வரி பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.

வெளியேறும் நபர்:

அதில் அசீம் அதிகமாக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எடுத்து விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் இருக்கிறார்கள். இதில் குறைந்த வாக்குகள் விஜே மகேஸ்வரி பெற்றிருக்கிறார். ஆகவே, இந்த வாரம் விஜே மகேஸ்வரி தான் வெளியே போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தனலட்சுமி தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த வாரம் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

Advertisement