பாட்டில்களை எடுத்து தலையில் அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள் – ஏன் தெரியுமா ?

0
775
biggboss
- Advertisement -

விரைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை இருந்து வருகிறது. தமிழை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழைப் போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் நான்காவது சீசன் எட்டி இருக்கிறது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியே துவங்கிவிட்டது. ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

-விளம்பரம்-

இதிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தனிப்பட்ட முறையில் யாரிடமும் பாசம் காட்டாமல் டாஸ்க் என்று வந்துவிட்டால் போட்டியாளர்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். அதேபோல டாஸ்க் என்று வந்துவிட்டால் நட்பு, பாசம் இதை பற்றி எல்லாம் பார்க்காமல் அடித்து வெளுத்து வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த சீசனில் தமிழ் பிக் பாஸ்ஸை விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

தெலுங்கு பிக் பாஸின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கியிருந்தார். அதன் பின்னர் நானி இரண்டாவது சீசனில் தொகுத்து வழங்கி இருந்தார். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீஸனிலும் நாகார்ஜுனாவின் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் நாகார்ஜுனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா கூட இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

தமிழை விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேஷன் பிராசஸில் ஈடுபட்டுள்ளனர். அதில் யார் யாரை நாமினேட் செய்கிறார்களோ அவர்களின் தலையில் பாட்டிலை உடைத்து நாமினேட் செய்துள்ளனர். இந்த வித்யாசமான நாமினேஷனை பார்த்து பலரும் ஷாக்கடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement