உங்க Trpக்கு நான் இறையாக மாட்டேன், பாலாஜியை வைத்து விஜய் டிவி செய்த திட்டத்தை போட்டு உடைத்த நித்யா.

0
430
- Advertisement -

திடீரென்று தன்னுடைய மனைவிக்கு தாடி பாலாஜி பிறந்தநாள் வாழ்த்து கூறி கோரிக்கை வைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது. சோசியல் மீடியாவிலும் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன் பின் பிக் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாகவும் தான் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

தற்போது நித்யா மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், அதற்கு முன் நித்யா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்தவர். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மருத்துவமனையில் எச்.ஆர்.அதிகாரியாக இருந்தவர். பாலாஜியை கல்யாணம் செய்த பிறகு தான் நித்யா வேலையிலிருந்து விலகி விட்டார். மேலும், நித்யா கணவரை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்று தன் குழந்தையை காப்பாற்றி வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வெடித்து கொண்டு தான் இருக்கிறது.

மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பாலாஜி:

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலாஜி மது அருந்துவிட்டு தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இப்படி இவர்களுடைய குடும்ப பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி நித்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனால் ஏழாம் தேதி நள்ளிரவு 12 மணிளுக்கு ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி என பாலாஜி டிபியில் வைத்திருந்தார். பின் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்டேட்டஸ்சில் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.
இப்படி தாடி பாலாஜி திடீரென்று தன்னுடைய மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது அவருடைய நண்பர்களின் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

பாலாஜி கொடுத்த விளக்கம்:

இது குறித்து நண்பர்கள் பாலாஜி இடம் பேச வந்த போது அவர் சில மணி நேரத்திலேயே அந்த ஸ்டேட்டஸை நீக்கி இருக்கிறார். ஆனால், டிபி மட்டும் மாற்றவில்லை. மேலும், இது குறித்து பாலாஜி கூறியிருந்தது, பொண்டாட்டிக்கு வாழ்த்து சொல்வது தப்பா? நான் வாழ்த்து சொன்னதற்கு நித்யா தேங்க்ஸ் சொன்னாங்க என்று கூறினார். இதனை அடுத்து நித்யாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நானே இந்த மனுஷன் என்னைக்கும் இல்லாத திருநாளா வாழ்த்து சொல்கிறார் என்று ஒரு நொடி யோசித்தேன். பின் இதற்கு பின்னாடி ஏதாவது ஒரு பிளான் இருக்கும் என்று எனக்கு தெரியும். நான் நினைத்தது சரியாக தான் நடந்தது.

பாலாஜி குறித்து நித்யா சொன்னது:

மறுநாளே கலக்கப்போவது யாரு தாம்சன் இடம் இருந்து போன் வந்தது. அவர், பாலாஜி நடுவராக இருக்கிற கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உங்களுடைய மகள் போசிகா கலந்து கொள்ளணும். இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்கள் பர்சனல் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை தரலாம் இல்லையா என்று சொல்லிக் கேட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசியில் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரி காட்டுனீங்களே அந்த மாதிரி திரும்பவும் காட்டப் போறீங்களா? உங்க டிஆர்பிக்கள் எல்லாம் இனி நான் இரையாக மாட்டேன். கமல் சார் முன்னாடி ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க. இனி இவங்க வாழ்க்கையில் பிரச்சனையே வராதுன்னு எல்லோருமே டிவியில் காண்பித்தீர்கள்.

நித்யா மகள் சொன்னது:

நிகழ்ச்சி முடிந்த மூன்றாவது நாளில் எங்களிடம் பாலாஜி சண்டைக்கு வந்தார். இப்ப வரைக்கும் ஒரு பொறுப்பான அப்பனாக மகளுக்கு வேண்டியதை அவர் எதையும் செஞ்சு இருக்காரா? இந்த மாதிரி டிராமா கண்டென்ட்டுக்கு எல்லாம் இனி நான் மயங்க மாட்டேன். இப்போதெல்லாம் போஷிகாவுக்கு அவளாகவே தெளிவான முடிவை எடுக்கிற அளவுக்கு வளர்ந்து விட்டாள். நீங்க அவளிடமே கேட்டுக்கோங்க என்று கூறி தன் மகளிடம் போனை கொடுத்துவிட்டார். அவர் அதெல்லாம் பேக்கா இருக்கும் என்று தோணுது அங்கிள் என்று கூறியிருந்தார்.

Advertisement