அந்த எஸ் ஐ-யால் என் வாழ்க்கையே போச்சு – தாடி பாலாஜி ஷாக்கிங் புகார். வீடியோ இதோ.

0
1885
balaji
- Advertisement -

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதும் இவர்கள் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.பின்னர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற பாலாஜி, நித்யா கூறிய குற்றச்சாட்டை மறுத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி,

- Advertisement -

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தனது குழந்தை போஷிகாவிடம் தேவையில்லாததைக் கூறி அதை தன்னிடம் சொல்லும்படி ஏவிவிடுவதாகவும் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 

உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் தனது மனைவி நித்யா ஆகியோரால் தனது குழந்தை போஷிகாவிற்கு ஆபத்து உள்ளதாக பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் கமலும் இதை தன்னிடம் கூறியுள்ளதாக பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் மனோஜ் நாசமாக்கி விட்டதாக கூறியுள்ள பாலாஜி, அவரை இடம் மாற்றம் எல்லாம் செய்யக்கூடாது, அவரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறியுளளார்.

-விளம்பரம்-
Advertisement